Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Study Material - Computer Science


Prepared by Mr. R.RAMESH,B.A(Eng).,M.Com.,B.Ed.,M.Phil.,PGDCA.,

10th Study Material - Science

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். மாணவர்களை அரசு கல்லூரிக்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

        விழுப்புரம் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை அரசு யோகா மற்றும்இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு

        2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 தேர்வுகள் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். சென்னையில், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. 

வி.ஏ.ஓ., தேர்வு இருப்பதோ 800; 10 லட்சம் பேர் போட்டிடி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

      டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங் களுக்கு, பிப்., 28ம்தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதில், சரியான முறையில் விவரங்கள் அளித்து, தேர்வுக்கட்டணம் செலுத்திய மற்றும் கட்டண சலுகை பெற்ற விண்ணப்பதார்களின் விவரம், www.tnpscexams.net இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.


ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: வாக்காளர் சிறப்பு முகாம் நடக்குமா?

      ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால், நாளை நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளது.ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி, 30, 31, பிப்ரவரி, 1 ஆகிய தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்தி போராட முடிவு செய்துள்ளது.


மக்கள் தொகை பதிவேட்டுப் பணி : ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி வழக்கு

ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:

குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு!

தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

மாணவர் சேர்க்கைக்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வசதிகள் குறித்த நோட்டீஸ் வினியோகிக்க திட்டம்

உடுமலை, அரசு துவக்கப்பள்ளிகளில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளது; பிப்., இறுதி முதல் 'நோட்டீஸ் 'வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பள்ளிகள் தோறும் பிப்.10ல் வழங்கல்

சுகாதாரத்துறை சார்பில் பிப்.,10ல் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.மத்தியரசு சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளாக பிப்.,10 கடை பிடிக்கப்படுகிறது. அன்று சுகாதாரத்துறை சார்பில் அங்கன்வாடிமையம், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க குடற்புழு நீக்கத்திற்கான 'அல்பென்டசோல்' மாத்திரை வழங்கப்பட உள்ளது.

வி.ஏ.ஓ., தேர்வு இருப்பதோ 800; 10 லட்சம் பேர் போட்டி

டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ., பதவியில், 813 காலியிடங் களுக்கு, பிப்., 28ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு, 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் மூலம், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அரசு பள்ளிகளை உற்சாகமடைய செய்துள்ளன.



வாக்காளர் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, மீண்டும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. நாளை மற்றும் பிப்., 6ல், மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடைபெறும். இதில், வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

7 வது ஊதியக்குழுவினை அமுல்படுத்த அமைக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் கூடுகிறது!!!

Nodal officers of different ministries and departments will hold first meeting on February 2 to formulate action points for processing 7th Pay Commission recommendations that have bearing on remuneration of about 1 crore central government employees and pensioners.

5,513 காலியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

நிகழாண்டில் 33 பதவிகளில் காலியாகவுள்ள 5,513 காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான திட்ட அறிக்கையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கே.அருள்மொழி கூறினார்.


ஆசிரியர் பயிற்சி: பிப்., 1ல் சான்றிதழ்

டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பிப்., 1ல், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகள்: அமைச்சர்

பள்ளி பாடத்திட்டத்தில் தொழிற்பயிற்சிகள் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மததிய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். நாட்டில் திறன் மி்க்க தொழிலாளர்களின் தேவை அனைத்து துறைகளிலும் அதிகளவில் தேவைப்படுகிறது. 

பிளஸ் 2 தேர்வுக்கு அனுமதிச் சீட்டு: தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் சனிக்கிழமை (ஜனவரி 30) முதல் பிப்ரவரி 1 வரை தேர்வறை அனுமதிச் சீட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.


விண்ணப்பித்த ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்: மத்திய அரசு தகவல்

விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் முகவரி, பின்னணியை அறிய போலீஸ் விசாரணை கட்டாயமாக இருந்தது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு அதிகபட்ச கால அவகாசம் 49 நாட்களாக இருந்தது.

கைவிடப்படும் நிலையில் விழுப்புரம் ரயில்வே பள்ளி!

கைவிடப்படும் நிலையிலுள்ள விழுப்புரம் ரயில்வே பள்ளியை மீட்டெடுக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்தினர். ரயில்வே பணியாளர்களின் குழந்தைகளுக்காக சென்னை பெரம்பூர், அரக்கோணம், திருச்சி, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.





ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

'இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.


பள்ளிக் கல்வித் துறை - இளநிலை உதவியாளர் நியமனம்: நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-2014-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி வெளியிடப்பட்டது.


கற்றல் அடைவுத் திறன் குறித்து அதிகாரிகள் ஆய்வு

தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

"பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.

'சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு தமிழக அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்க முடியாது'

'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive