NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காந்தி படம் இல்லாமல் வெளிவந்த ரூ.2,000! – யார் பொறுப்பு?

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி,
பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. மேலும், பல இடங்களில் ஏடிஎம்-கள் வேலை செய்யாததால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அப்படியே பணத்தை எடுக்க முடிந்தாலும்,
பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் தான் வருகிறது.
இந்நிலையில், ஏடிஎம்-மில் காந்தி படம் இல்லாத 2,000 ரூபாய் நோட்டு வெளிவந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், சொபூரில் விவசாயி ஒருவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுத்துள்ளார். அப்போது வெளிவந்த 2,000 ரூபாய் நோட்டில் காந்தியின் படம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அது குறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சொபூர் எஸ்பிஐ வங்கி அதிகாரி ஆர். கே. ஜெயின் கூறும்போது, “இது போலியான ரூபாய் நோட்டோ அல்லது கள்ள நோட்டோ கிடையாது. இந்த நோட்டில் அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆர்பிஐ க்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், சுதிர் ஷாந்தில்யா என்பவர் எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, முழுமையாக அச்சடிக்கப்படாத 500 ரூபாய் நோட்டு வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷரிஃபர் ரஹ்மான் என்பவரும் ஏடிஎம்-ல் பணம் எடுத்துள்ளார். அப்போது முழுமையாக அச்சடிக்கப்படாத 2000 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. ஏற்கனவே, 2000 ரூபாய் நோட்டுகள் சாயம் போவதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு மத்திய அரசும் விளக்கமளித்தது. இப்போது காந்திபடம் இல்லாமல் வெளிவந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே, ரூபாய் நோட்டுகள் குறித்து மத்திய அரசு மாற்றி மாற்றி கூறும் அறிவிப்பால் எதைக் கடைப்பிடிப்பது? என்னும் குழப்பத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளிலும் அச்சுப்பிழை, காந்தி படம் இல்லாதது என பல குளறுபடிகள், பெரிய தவறுகள் நடந்து வருகிறது. ஆனால், அதற்கு மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ பொறுப்புடன் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மீது, அரசு கொண்டிருக்கும் அலட்சிய மனோபாவத்தையே சுட்டிக்காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive