NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கப் போவதில்லை" - இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.எஸ்.நேகி தகவல்.

     கடந்த 2009ஆம் ஆண்டு தமிழக அரசு மாநில அளவில் ஜல்லிகட்டுக்கு ஆதரவான சட்டத்தை நிறைவேற்றியது.

 ஆனால் பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கின.
 ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
 இதற்கிடையே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா..?  நடக்காதா..? என்று எதிர்பார்ப்பில்
கடைசி நிமிடம் வரை ஜல்லிக்கட்டு நடக்காத காரணத்தினால் தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் வெடித்தது.
 இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம்
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசு மூலம் சட்டமாக்கப்பட்டது.
 இந்த சட்டத்தை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அட்டவணை ஒன்பதில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
 உச்சநீதிமன்றத்தில் உள்ள ஜல்லிக்கட்டு தடை வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில்
தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்தை எதிர்த்து சியோப்பா, கியூப்பா என்ற
இரண்டு அமைப்புகளும் இடைக்கால மனுவை தாக்கல் செய்தனர்.
 இது தவிர மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்த
அறிவிக்கையை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றதையடுத்து விலங்கு நல வாரிய அமைப்பின்
அஞ்சலி சர்மா உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளனர்.
 சியோப்பா, கியூப்பா இரண்டும் தனியார் அமைப்புகள். மத்திய அரசின் சட்டத்தை
எதிர்த்து வழக்கு தொடர உரிமை உள்ளது.
 ஆனால் மத்திய அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்தை மத்திய
அரசின் அங்கமான விலங்க நல வாரியம் எதிர்க்க முடியாது.
 இவ்வாறு மத்திய அரசின் அமைப்பில் இருப்பவர்களே மத்திய அரசின் சட்டத்துக்கு
எதிராக வழக்கு தொடர்வது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல.
 இதனையடுத்தது இடைக்கால மனுவை வாபஸ் பெறுமாறு கோரி வக்கீல் அஞ்சலி சர்மாவுக்கு
இந்திய விலங்குகள் நல வாரிய செயலாளர் எம்.ரவிக்குமார் கடந்த 24-ந் தேதி கடிதம் ஒன்றை எழுதினார்.
 ஆனால் இடைக்கால மனுவை வாபஸ் பெற முடியாது என்றும், மனு தாக்கல்
செய்ய தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் அஞ்சலி சர்மா தெரிவித்தார்.
 இதைத்தொடர்ந்து, இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் எஸ்.எஸ்.நேகி உறுப்பினர் அஞ்சலி சர்மாவுக்கு
நேற்று கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
 அந்த கடிதத்தில்,ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால மனு தாக்கல்
செய்ய முன்பு தவறுதலாக அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அந்த அனுமதியை
தற்போது வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறிஉள்ளார்.
 மேலும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை
உச்சசீதிமன்றத்தில் எதிர்க்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive