NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'நெட்' தேர்வு அறைக்குள் பேனா 'வாட்ச்' கொண்டு செல்ல தடை: யு.ஜி.சி., கட்டுப்பாடு

        இன்று நடக்கும் கல்லுாரி உதவிப்பேராசிரியர் பதவிக்கான 'நெட்' தகுதிதேர்வில் 'பேனா, கடிகாரம்' போன்றவற்றுடன் பங்கேற்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தடை விதித்துள்ளது.மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலில் தேசிய தகுதி தேர்வை (நெட் தேர்வு) இன்று டிச.,27ல் நாடு முழுவதும் நடத்துகிறது.

நாட்டிலுள்ள 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். மதுரையில் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற உள்ளது.தேர்வு மையத்தில் ஏற்படும், அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்க, 'விண்ணப்பதாரர்கள் தங்கள் கைகளில் அணிந்துள்ள கைக்கடிகாரம், பேனா, தோல் மற்றும் துணியினாலான 'பை'களை அறைக்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது. தேர்வு அறையில் பேனா வழங்கப்படும். இதுகுறித்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.

'நெட்' தேர்வில் பங்கேற்க உள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: வட இந்தியாவில் நடந்த தேர்வு குளறுபடிகளை தவிர்க்கவே, யு.ஜி.சி., இந்த விதிமுறையை அமுல்படுத்தியுள்ளது.

தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய 14 நடைமுறைகள் குறித்து டிச.,15ல் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளும்படி விதிமுறைகளை அமல்படுத்தியது. அந்தந்த விண்ணப்பதாரர்களின் தேர்வு அறை அனுமதி சீட்டிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த முறை பேனா, பென்சில், போன்ற பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. இம்முறை அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை, என்றனர்.---




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive