NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர் கூட்டுறவு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு

       பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
        தமிழகத்தில் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் அரசு, பொது மற்றும் தனியார்துறை பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு தனிநபர் கடன் 7 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது. 

விலைவாசி மற்றும் சம்பள உயர்வு காரணமாக அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென, சிக்கன நாணயச் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 
மேலும் வங்கிகளில் பணியாளர்களின் ஊதியம் அடிப்படையில் தனிநபர் கடன் 
வழங்கப்பட்டு 
வருகிறது. இதையடுத்து பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் 
சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பை 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த உத்தரவில், கடனை 120 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். மொத்த சம்பளத்தில் 25 மடங்கு (அ) 12 லட்சம் ரூபாய் இதில் எது குறைவோ அத்தொகையே கடனாக வழங்கப்படும். 
பணியாளர்களின் மொத்த ஊதியத்தில் அனைத்து பிடித்தங்களும் போக வீட்டிற்கு கொண்டு செல்லும் ஊதியம் 25 சதவீதத்திற்கு குறைவாக 
இருக்காதபடி கடன் வழங்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive