நேபாளம், பூடானில் ஆதார் கார்டு செல்லாது:மத்திய அரசு உத்தரவு!!!
நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இந்தியாவின் ஆதார் கார்டு செல்லுபடியாகாது
என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது: இந்தியாவில் இருந்து
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. இந்தியர்கள் விசா
இல்லாமல் சென்று வரலாம். அதேநேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையே முக்கிய
ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மேற்கண்ட இரு நாடுகளிலும்
ஆதார் கார்டு செல்லுபடியாகாது என கூறி உள்ளது
இந்தியாவின் சிக்கிம் மே.வங்கம், பீகார் உ.பி., உத்தரகண்ட் ஆகிய
மாநிலங்களின் எல்லைப்பகுதியாக இந்தியர்கள் நேபாளம் சென்றுவந்தனர். மேலும்
சிக்கிம் அருணாசலபிரதேசம், அசாம், மே.வங்கம் ஆகிய மாநிலங்களின் வழியாக
இந்தியர்கள் தினசரி 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மக்கள் தினசரி கூலி
தொழிலாளர்களாக எல்லைப்பகுதி நகரங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது
மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால் மக்களிடையே மேலும் சிரமம் ஏற்படக்கூடும்
என கூறப்படுகிறது
Revision Test 2026
Public Exam 2026
Home »
» நேபாளம், பூடானில் Aadhaar Card செல்லாது:மத்திய அரசு உத்தரவு!!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...