Text Books / Guides / Study Materials Download
குரூப் 2 தேர்வு: 3,472 பணியிடங்களுக்கு அக்டோபர் 15 முதல் கலந்தாய்வு
குரூப் 2 தேர்வு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,472 பேருக்கு வரும் 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான 6,695 பதவிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினர்.
ஆசிரியர் பணி நியமனத்திற்கு புதிய விதிமுறைகளால் தேர்வர்கள் அதிருப்தி
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
வெயிட்டேஜ் அடிப்படையில், 100 மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. டி.இ.டி., தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 60 மதிப்பெண்களை பெற, தேர்வில், 150க்கு, 135 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம், தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் அமலான பின், டி.இ.டி., தேர்வு முறை அமலுக்கு வந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய மதிப்பெண் மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
How to School and Staff Details Entry to www.tndse.com Website? - Easy way Article.
முதலில் தங்களது browser இல் நமது பாடசாலை வலைதளத்திற்கு செல்லவும்.
நமது வலைத்தளத்தில் இடது புறம் உள்ள Link ஐ Click செய்யவும்.
அரசு பள்ளி கல்வி துறை வலைதளத்திற்கு தாங்கள் செல்லுவீர்கள். அங்கு உள்ள login ஐ click செய்யவும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)- "மாறுகிறது ரேங்க் பட்டியல்"
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
நேரடி தொடர்பு கொள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு
கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் களப்பயிற்சிகள்அளிக்கப்படும்.
நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் கீழ்க்காணும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
1) உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் - 4 வாரங்கள்
2) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் - 2 வாரங்கள்
3) அனைவருக்கும் கல்வித் திட்டம் - 3 நாட்கள்
4) அரசு ஆசிரியர் பயிற்சி மையம் - 3 நாட்கள்
5) தொடக்கப் பள்ளிகள் - 2 வாரங்கள்
6) நடுநிலைப் பள்ளிகள் - 2 வாரங்கள்
7) தொடக்கக் கல்வி இயக்ககம் - 1 வாரம்
|
சத்துணவு பணியாளர் நியமன ரத்து தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை
சத்துணவு பணியாளர் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு, 6 வாரம் இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசின் மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி நடந்த தேர்வில், 6 .76 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்; 2, 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இந்நிலையில், இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அதில், "தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது' என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
பள்ளி கட்டட பணிகள்: தலைமையாசிரியர்கள் போர்க்கொடி
பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம். எஸ்.ஏ.,) திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளுக்கான பொறுப்பில் இருந்து, தலைமை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2009ல் இருந்து, மத்திய அரசு நிதி மூலம் செயல்படும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் சார்பில், மக்கள் தொகை, பள்ளிகளிடையே உள்ள தூரம் போன்ற சில வரையறைகள் படி, நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு தமிழக அரசு உத்தரவு
பள்ளி வாகனங்கள் இயக்கம் முறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு சட்டம்,2012 என்ற பெயரில் இந்த மாதம் (அக்டோபர்,1) முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.
பிற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி
பிற்படுத்தப்பட், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி
இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது. இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய மத்யமி்க் சி்க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது.
உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தை விரைந்து முடிக்க உத்தரவு - உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை, விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக,..
கல்வி இணை செயல்பாடு -தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை கையேடுகள் PRIMARY/UPPER PRIMARY CO-SCHOLASTIC DRAFT NEW!
Primary School
Upper Primary School
குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு
குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் உரிய முறையில் பள்ளி தொகுப்பெடுகள் மற்றும் கலண்டர்களில் இடம்பெறச் செய்தும் கலந்தாய்வுகள் நடத்தியும் மேம்படுத்தவும் . குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக செயல்படுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை அரசு / அரசு சாரா நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்தவும் - பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
click here & download [Press Release No.358] ( Honble Chief Minister announces D.A rate hike for State Government employees )
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.
கீ-ஆன்சர் குளறுபடிக்கு நிபுணர் குழுவே பொறுப்பு: டி.ஆர்.பி. திட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, கீ-ஆன்சர் ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - வேலூர் மாவட்டம் - நாளை மற்றும் 12.10.2012 நடைபெறவுள்ள EDUSAT PROGRAMME நடைபெறாது என அறிவிப்பு.
05.10.2012 மற்றும் 12.10.2012 ஆகிய நாட்களில் நடைபெற வேண்டிய நடைபெறாது என்பதையும், அதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி
மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு பெற்றவர் பட்டியல் ரத்து செய்து, புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதிய பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.
Japan Jenesys Programme to 9-11th Std Students
The Japan-East Asia Network of Exchange for Students and Youths Programme (JENESYS).
| ||
| Letter Inviting nomination for JENESYS 2012-2013 | ||
| Annexure I | ||
| Annexure II & III | ||
| Supporter's 20Guide-2010. | ||
| JENESYS Entry Form 2012-2013. | ||
| VISA form. | ||
| Sample of Visa Application. | ||
| Letter of Consent | ||
| Declaration of Parental Control | ||
| LTPI details list. | ||
| Procedure to obtain passport under Tatkal Scheme. | ||
| General Information on JENESYS Programme. | ||
| JENESYS Introduction. | ||
பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு"டாப்- அப்' சலுகை
மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என,
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண் 72 ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.










