Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சட்ட கல்லூரிகள் 15ல் திறப்பு : தேர்வு இரு வாரம் தள்ளி வைப்பு


           ஒரு மாத விடுமுறைக்கு பின், சட்ட கல்லூரிகள், வரும், 15ம் தேதி திறக்கப்படுகின்றன. தேர்வுகள், இரு வாரங்களுக்கு தள்ளி போகிறது.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், சட்டம் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம் தேதி, போராட்டங்களை துவங்கினர்.

அரசுத் தேர்வுகளில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்த கருத்தரங்கம்


          சிதம்பரம் காமராஜ் கல்வியியல் கல்லூரியில் தமிழக அரசு பொதுத் தேர்வுகளில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
 
 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்


           சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் வங்கியில் பணம் எடுத்து ரொக்கமாக ஊதியம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
 
 

அரசு ஆரம்பப் பள்ளிகளை சீர்திருத்த வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!


           "அரசு ஆரம்பப்பள்ளியை, பலகோணத்தில் சீர்த்திருத்தம் செய்து, அரசு ஊழியர் மற்றும் அனைத்து குழந்தைகளும் அங்கு படிக்க வழிவகை செய்து, பள்ளியின் தரத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என, நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறிவியல் பாடத்தில் எளிதான கேள்விகள்: சதம் எண்ணிக்கை உயரும்


             பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், அனைத்து கேள்விகளும் எளிமையாக இருந்ததால், அதிகம் பேர் 100 மார்க் பெறுவார்கள் என மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


          தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

அல்ஜீப்ராவை விளையாட்டு முறையிலும் கற்கலாம்!


            அல்ஜீப்ரா குறித்து பயமும், கவலையும் கொண்டவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. டிராகன் பாக்ஸ் என்ற ஒரு கருவியின் மூலம், அல்ஜீப்ராவை எளிதாக கற்றுக் கொள்ளலாம்.
 
 

8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...



        எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


            09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
 
 

ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்


              பிளஸ் 2 விடைத்தாள் திருத்த தற்போது 7.50 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். 1.6.2006க்கு முன்பு
தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 
 

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: தேர்வுத்துறை


           விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள் மாயமான விவகாரத்தில், நீண்ட ஆலோசனைக்குப் பின், "பாதிக்கப்பட்ட, 221 மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
 

விவேகானந்தர் பெயரில் 9 பல்கலைகளில் ஆய்வு மையம்


               "ஒன்பது பல்கலைக்கழகங்களில், 25 லட்சம் ரூபாய் செலவில், சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
 

ஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகுதியில் அச்சுப்பிழை ஏற்பட்ட கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்


            SSLC பொதுத் தேர்வு, ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி தேர்வில் வினாத்தாள் குளறுபடி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 
 

பள்ளி செல்லா குழந்தைகள் வயது வரம்பு 18 ஆக அதிகரிப்பு


            பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின், வயது வரம்பு, 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பற்றி, வீடு வீடாகசென்று கணக்கெடுக்கப்படுகிறது.
 
 

அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்' - News Paper


         தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண் பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


நாளை முதல் பாஸ்போர்ட்டில் மாற்றம்


       பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள், நாளை முதல் அமலுக்கு வரும் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்


           தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.
 
 

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பாளையில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


              இலங்கையில் தனிஈழம் அமைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக் சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழ தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்  

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகைகள் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


          ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணிநியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
 
 

டி.என்.பி.எஸ்.சி புதிய சிலபஸ் - வார இதழ் செய்தி


            இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது மாவட்ட வருவாய் மற்றும் நிர்வாகத்தை கவனித்து கொள்ள ஐ.சி.எஸ் பதவியை உருவாக்கினர். அதாவது இன்றைய ஐ.ஏ.எஸ் பணிக்கு முன்னோடி. அன்றைய ஐ.சி.எஸ் தேர்வு இன்றைய சிவில் சர்வீசஸ் தேர்வு போன்று முழுமையான போட்டித்தேர்வாகும். அந்த தேர்வை ஆங்கிலேயர் போல இந்தியரும் எழுதலாம்.
 
 

தானியங்கி டஸ்டர்: மதுரை கல்லூரி மாணவர்கள் சாதனை


            கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும் இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.


2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா


            அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.
 
 

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


              சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்


           வகுப்பறைகள் போர்க்களமாக மாறாமல் இருக்க வேண்டுமெனில், ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம், என பட்டமளிப்பு விழாவில், ஆசிரியர் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
 
 

சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்


           சராசரி மதிப்பெண் பெறுபவர்களே, சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுகின்றனர் என, கல்வியாளர் ரமேஷ் பிரபா கூறினார்.

CCE GRADING SHEET WITH FORMULA FOR YEAR END RESULTS 2012-2013


           கல்வி ஆண்டின் முடிவில் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்யவும் 

           உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெறவும் தயார் செய்ய வேண்டிய படிவத்தை பெற இங்கே சொடுக்கவும்.  படிவத்தை முழுவதுமாக படிக்க இஸ்மாயில்மற்றும் வானவில் எழுத்துருக்களை பயன்படுத்தவும் 

 
 
 

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்


               தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்


              "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை (இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது. 

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை


              வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 


பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்


              இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும் கலக்காமலும் உள்ளனர். அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து வருகிறது.

இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்


பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1.செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்: குளிர்ச்சியை கொடுக்கும்

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: ஏப்ரல் 19 வரை கோரிக்கைகளை அனுப்பலாம்


            சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம்  மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.
 
 

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி


            போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
 

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குளறுபடிகளை நீக்க என்ன வழி?


           பாதிப்புகளை சீர்செய்ய, அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எதிர்காலத்தில், இதுபோல நடக்காமல் இருக்க, தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என, கல்வியாளர்கள் குரல் கொடுக்கின்றனர். அவர்களின் கருத்துக்கள் இதோ:
 
 

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?


            இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ள நிலையில்,அரசின் முயற்சிக்கு எதிராக, தனியார் பள்ளிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
 
 

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு


              தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்திக் குறிப்பு : குரூப்- 4ல், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பணிக்கு, 2012, ஜூலை 7ல், தேர்வு நடந்தது.
 
 

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு


             தமிழகத்தில், 11 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின், தென் மண்டல அலுவலக குழு கூட்டம், சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், புதிய ஆசிரியர் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி கேட்ட கோப்புகள் குறித்து பரிசீலனை செய்து, முடிவு எடுக்கப்பட்டது.
 
 

தொடக்க கல்வி இணை இயக்குனரிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு


         தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!


            Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

கிராமத்தில் சுமார் 900 மரக்கன்றுகள் நட்டு 9 ஆண்டுகளாக வளர்க்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள்


 
 
              விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 9 ஆண்டுக்கு மேலாக ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
 
 

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை


            "சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
 
 

"விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்"


          "பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம் மூலம் அனுப்பும் பணியின் போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர் களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும்" என்று, மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்) தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு


               பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம் ரயில் நிலையத்தில், அஞ்சல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை - Dina thandhi



           செஞ்சியில் காணாமல் போன பத்தாம் வகுப்பு விடைத்தாள்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.


மாயமான 10ம் வகுப்பு விடைத்தாள்: மறுதேர்வு நடக்குமா? - Dinamalar


          "பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"


         "இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என, வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.

கல்வி கொடுக்கும் கலெக்டர்!



 
 
              இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர். திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள்.
 
 

ஆசிரியர்களின் பிரம்பு, சாட்டைக்கு தடை


           மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:
 
         தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. 
 

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்


              கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு, மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 
 

DIET Principal Promotion to 15 Senior Lectures.




             தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி  மையத்தில் பணிபுரியும் 15 முது நிலை விரிவுரையாளர்கள்  30.06.2013 அன்று நடைபெற்ற Online கலந்தாய்வின் மூலம் நிறுவன முதல்வர்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இராணிப்பேட்டை DIET முதல்வராக திரு. பஷீர் அகமது அவர்கள் பதவி ஏற்று உள்ளார்.  


கணிதம் இனித்தது.



         10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித தேர்வு இன்று காலை நடந்து முடிந்தது. இதுவரை நடந்து முடிந்த பாடங்களிலேயே இந்த கணித தேர்வு தான் மிக மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


காளான்களைப்போல் முளைக்கும் பொறியியல் கல்லூரிகள்: உயர் நீதிமன்றம் அதிருப்தி


            காளான்களைப் போல் முளைக்கும் ஏராளமான பொறியியல் கல்லூரிகளால் பொறியியல் கல்வியின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சாடியுள்ளது.
 
 

1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன் குறைந்த மாணவர் களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி


            குமரி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிய திறனறி தேர்வு அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
 
 

12th Study Material

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ?


       ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால்  சம்பளவிகிதம்  திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது.ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து  இந்த பொ துவான கா ரணியை கொண்டு (common multiplying factor ‘3(  இந்த  எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின்  pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழு விலு ம்  தொடர்ந்தால் கீழ்க்கண்ட வாறு எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் அமையும்.


தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?


          தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.

திறந்த நிலையில் நேரடி பட்டம் பெற்றவர்களை, அரசு வேலை வாய்ப்புகளுக்கு அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலினை


                  சட்டசபையில், உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், நேற்று நடந்தது. மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பேசியதாவது: திறந்தநிலை பல்கலையில், நேரடி பட்டம் பெற்றவர்கள், அரசு வேலை வாய்ப்புகளுக்கு செல்வதற்கு, அரசாணை எண் 107, தடையாக உள்ளது.
   

ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்


           நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியல் வல்லுநரான சி.வி.ராமனால், கடந்த 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்தான், ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.


10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவக்கம்


            பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 66 மையங்களில், வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
.
 

கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 398 பாடப்பிரிவுகள்


            தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு, புதிதாக, 398 பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
 

கல்லூரியில் கட்டாய நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை


          "கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் எச்சரித்துள்ளார்.
 
          உயர்கல்வி மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நடந்த விவாதம்:

           

திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது


           கல்லூரிகள் மூடப்பட்டதால், செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப் போகாது. திட்டமிட்டபடி, தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
 

தென் மாநில அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம்


         "உயர்கல்வி சேர்க்கையில், தென் மாநிலங்கள் அளவில், 19 சதவீதத்துடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை, 25 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
 

மேலூரில் 2 பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்


              சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி பேசுகையில், "மேலூர் தொகுதி, மங்களாம்பட்டி, பள்ளப்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுமா" என்றார்.
 

ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி


 
 
           உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர்.
 

புதிதாக 530 உதவி பேராசிரியர்கள் நியமனம்


           தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது, அரசு ‌கலை மற்றும் பன்முக கல்லூரிகளில் 530 உதவி பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவு


           தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
 
 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்கு பொறுப்பேற்பு


              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகஅரசு உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்து ஆய்வு செய்தது.
 
 

ஆங்கில நுழைவு தேர்வில் மதுரை கல்லூரி மாணவி சாதனை


             வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான, தேசிய அளவில் நடந்த ஆங்கில நுழைவுத் தேர்வில் (டோபல்), மதுரை மாணவி எம்.சிவகாமி வெற்றி பெற்றார்.
அமெரிக்கப் பல்கலையில், உதவித்தொகையுடன் மேற்படிப்பு (எம்.எஸ்.,) படிப்பதற்கான, ஆங்கில நுழைவுத் தேர்வு நடந்தது. இந்தியா, சீனா, தைவான், கொரியாவில் இருந்து, தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 30 பேரில் ஒருவராக, மதுரை சிவகாமி தேர்வானார்.


அரசுப் பள்ளிக்குப் பரிசு


         சிறப்பான சேவை செய்த பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம் இரண்டாம் பரிசை பெற்றது.


மாணவர்கள் அறிவியல் திறனை வளர்க்க வேண்டும்: இஸ்ரோ இயக்குனர் பேச்சு


         "மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்," என இஸ்ரோ இந்திய விமானவியல் ஆராய்ச்சி நிறுவன (மிஷன்) இயக்குனர் சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.


அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி


          "அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக் இன்டையர் தெரிவித்தார்.


மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம்; தேவை விழிப்புணர்வு


           சென்னையில் மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் துணை நகரம் அமைக்கப்படும்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா


         தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மதுரை நகரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா, மதுரை விமான நிலையத்திற்கு 586.86 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த துணை நகரம் அமைக்கப்படும்.
 
 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எட். படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகம்


           தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
 
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive