Text Books / Guides / Study Materials Download
8, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
09.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை
வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து
ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே
ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில்
கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு
இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த தற்போது 7.50
ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 10 ரூபாயாக உயர்த்த வேண்டும். தன் பங்கேற்பு
ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.
1.6.2006க்கு முன்பு
தொகுப்பூதியத்தில் பணியில் சேர்ந்த அனைவரையும்
பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க
வேண்டும். அடுத்த மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள் நடந்து
வருகிறது.
அறிவியல் தேர்வும் தப்பவில்லை : ஒரு மதிப்பெண் விடையில் பாதி, "மிஸ்சிங்' - News Paper
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகளில் நடந்த பல
குளறுபடிகளைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த
அறிவியல் தேர்விலும், குளறுபடி ஏற்பட்டது. கேள்வித்தாளில், ஒரு மதிப்பெண்
பகுதியில், விடையின் பாதி வார்த்தைகள், "மிஸ்சிங்' ஆனதால், இதற்குரிய
மதிப்பெண் வழங்கப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தானியங்கி டஸ்டர்: மதுரை கல்லூரி மாணவர்கள் சாதனை
கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும்
இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள்
உருவாக்கியுள்ளனர்.
விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ,
மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ,
மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு
அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு
துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும்
மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி
அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.
CCE GRADING SHEET WITH FORMULA FOR YEAR END RESULTS 2012-2013
கல்வி ஆண்டின் முடிவில் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்யவும்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெறவும் தயார் செய்ய வேண்டிய படிவத்தை பெற இங்கே சொடுக்கவும். படிவத்தை முழுவதுமாக படிக்க இஸ்மாயில்மற்றும் வானவில் எழுத்துருக்களை பயன்படுத்தவும்
அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்
தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை
மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு
வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி
மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில்
மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்
"அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி
புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான
தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி.,
கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை
(இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது.
இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்
பழங்களின் மருத்துவ குணங்கள்:-
1.செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2.பச்சை வாழைப்பழம்: குளிர்ச்சியை கொடுக்கும்
1.செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்
2.பச்சை வாழைப்பழம்: குளிர்ச்சியை கொடுக்கும்
11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு
தமிழகத்தில், 11 புதிய பி.எட்.,
கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு தெரிவித்து உள்ளது.
ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின், தென் மண்டல அலுவலக குழு கூட்டம்,
சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய
மாநிலங்களில், புதிய ஆசிரியர் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி கேட்ட
கோப்புகள் குறித்து பரிசீலனை செய்து, முடிவு எடுக்கப்பட்டது.
நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!
Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல
பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால
கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
"விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்"
"பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம் மூலம் அனுப்பும் பணியின்
போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர் களும் கடைசி நிமிடம் வரை
இருந்து கண்காணிக்க வேண்டும்" என்று, மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர்
சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்) தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம்
ரயில் நிலையத்தில், அஞ்சல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாயமான 10ம் வகுப்பு விடைத்தாள்: மறுதேர்வு நடக்குமா? - Dinamalar
"பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை
நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன்
தெரிவித்தார்.
"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"
"இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என,
வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.
கல்வி கொடுக்கும் கலெக்டர்!
இளமையில்
கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில்
தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு
அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர். திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள
செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து
குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள்.
ஆசிரியர்களின் பிரம்பு, சாட்டைக்கு தடை
மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில்
உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை
விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி
ஆய்வாளருக்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு
சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால்
அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை
வழங்க கூடாது.
கணிதம் இனித்தது.
10 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கான கணித தேர்வு இன்று காலை நடந்து முடிந்தது. இதுவரை நடந்து முடிந்த பாடங்களிலேயே
இந்த கணித தேர்வு தான் மிக மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ?
ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால் சம்பளவிகிதம் திருத்தி அமைக்கும்போது பழைய
ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம்
அமைந்துள்ளது.ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை
தவிர் த்து இந்த பொ துவான கா ரணியை கொண்டு (common multiplying factor ‘3( இந்த எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின் pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழு விலு ம் தொடர்ந்தால் கீழ்க்கண்ட வாறு எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் அமையும்.
ராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்
நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியல் வல்லுநரான சி.வி.ராமனால், கடந்த
1948ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்தான், ராமன்
ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவு
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற
ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு
114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப்
புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட
பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
ஆங்கில நுழைவு தேர்வில் மதுரை கல்லூரி மாணவி சாதனை
வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கான, தேசிய அளவில் நடந்த ஆங்கில நுழைவுத் தேர்வில் (டோபல்), மதுரை மாணவி எம்.சிவகாமி வெற்றி பெற்றார்.
அமெரிக்கப் பல்கலையில், உதவித்தொகையுடன் மேற்படிப்பு (எம்.எஸ்.,)
படிப்பதற்கான, ஆங்கில நுழைவுத் தேர்வு நடந்தது. இந்தியா, சீனா, தைவான்,
கொரியாவில் இருந்து, தலா 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 30 பேரில்
ஒருவராக, மதுரை சிவகாமி தேர்வானார்.
அரசுப் பள்ளிக்குப் பரிசு
சிறப்பான சேவை செய்த பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம் இரண்டாம் பரிசை பெற்றது.
மாணவர்கள் அறிவியல் திறனை வளர்க்க வேண்டும்: இஸ்ரோ இயக்குனர் பேச்சு
"மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்,"
என இஸ்ரோ இந்திய விமானவியல் ஆராய்ச்சி நிறுவன (மிஷன்) இயக்குனர்
சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி
"அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது
படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக்
இன்டையர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம்; தேவை விழிப்புணர்வு
சென்னையில் மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.







