Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தானியங்கி டஸ்டர்: மதுரை கல்லூரி மாணவர்கள் சாதனை


            கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும் இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.


2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதம் இன்றி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் -அரசு முதன்மை செயலாளர் சபிதா


            அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2013 - 14 கல்வி ஆண்டில் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், 4 செட் சீருடைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். இவற்றை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கிற முதல் நாளே வழங்க வேண்டும்.
 
 

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


              சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.

வகுப்பறை போர்க்களமாக மாறாதிருக்க ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம்


           வகுப்பறைகள் போர்க்களமாக மாறாமல் இருக்க வேண்டுமெனில், ஆசிரியர்களின் அறிவுரைகள் அவசியம், என பட்டமளிப்பு விழாவில், ஆசிரியர் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
 
 

சராசரி மதிப்பெண் பெறுவோரே சாதனையாளர் ஆகின்றனர்


           சராசரி மதிப்பெண் பெறுபவர்களே, சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுகின்றனர் என, கல்வியாளர் ரமேஷ் பிரபா கூறினார்.

CCE GRADING SHEET WITH FORMULA FOR YEAR END RESULTS 2012-2013


           கல்வி ஆண்டின் முடிவில் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்யவும் 

           உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெறவும் தயார் செய்ய வேண்டிய படிவத்தை பெற இங்கே சொடுக்கவும்.  படிவத்தை முழுவதுமாக படிக்க இஸ்மாயில்மற்றும் வானவில் எழுத்துருக்களை பயன்படுத்தவும் 

 
 
 

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்


               தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்


              "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை (இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது. 

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை


              வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 


பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்


              இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும் கலக்காமலும் உள்ளனர். அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து வருகிறது.

இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்


பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1.செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்: குளிர்ச்சியை கொடுக்கும்

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: ஏப்ரல் 19 வரை கோரிக்கைகளை அனுப்பலாம்


            சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம்  மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.
 
 

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி


            போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
 

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குளறுபடிகளை நீக்க என்ன வழி?


           பாதிப்புகளை சீர்செய்ய, அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எதிர்காலத்தில், இதுபோல நடக்காமல் இருக்க, தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என, கல்வியாளர்கள் குரல் கொடுக்கின்றனர். அவர்களின் கருத்துக்கள் இதோ:
 
 

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?


            இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ள நிலையில்,அரசின் முயற்சிக்கு எதிராக, தனியார் பள்ளிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
 
 

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு


              தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்திக் குறிப்பு : குரூப்- 4ல், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பணிக்கு, 2012, ஜூலை 7ல், தேர்வு நடந்தது.
 
 

11 பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மறுப்பு


             தமிழகத்தில், 11 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின், தென் மண்டல அலுவலக குழு கூட்டம், சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், புதிய ஆசிரியர் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி கேட்ட கோப்புகள் குறித்து பரிசீலனை செய்து, முடிவு எடுக்கப்பட்டது.
 
 

தொடக்க கல்வி இணை இயக்குனரிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு


         தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்........!!


            Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.

கிராமத்தில் சுமார் 900 மரக்கன்றுகள் நட்டு 9 ஆண்டுகளாக வளர்க்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள்


 
 
              விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கடந்த 9 ஆண்டுக்கு மேலாக ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.
 
 

ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை


            "சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ‌ை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்து மாநில முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
 
 

"விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்"


          "பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம் மூலம் அனுப்பும் பணியின் போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர் களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும்" என்று, மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்) தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் சேதமான விவகாரம்: அஞ்சல்துறை விஜிலன்ஸ் ஆய்வு


               பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம் ரயில் நிலையத்தில், அஞ்சல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாயமான 10ஆம் வகுப்பு விடைத்தாள்கள்: பாதித்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த ஆலோசனை - Dina thandhi



           செஞ்சியில் காணாமல் போன பத்தாம் வகுப்பு விடைத்தாள்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.


மாயமான 10ம் வகுப்பு விடைத்தாள்: மறுதேர்வு நடக்குமா? - Dinamalar


          "பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


"இணையதள தகவல்களை நம்பி வெளிநாட்டில் படிக்கச் செல்லாதீர்"


         "இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என, வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.

கல்வி கொடுக்கும் கலெக்டர்!



 
 
              இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர். திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள்.
 
 

ஆசிரியர்களின் பிரம்பு, சாட்டைக்கு தடை


           மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:
 
         தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. 
 

மடிக்கணினிகள் வழங்க தாமதம் ஏன்?: முதல்வர் ஜெ., விளக்கம்


              கணினி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு கேட்கும் அளவு, மடிக்கணினிகளை வினியோகம் செய்யும் சக்தி இல்லாததால், மாணவர்களுக்கு மடிக்கணினி, படிப்படியாகச் வினியோகம் செய்யப்படுகிறது" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 
 

DIET Principal Promotion to 15 Senior Lectures.




             தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி  மையத்தில் பணிபுரியும் 15 முது நிலை விரிவுரையாளர்கள்  30.06.2013 அன்று நடைபெற்ற Online கலந்தாய்வின் மூலம் நிறுவன முதல்வர்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இராணிப்பேட்டை DIET முதல்வராக திரு. பஷீர் அகமது அவர்கள் பதவி ஏற்று உள்ளார்.  


கணிதம் இனித்தது.



         10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித தேர்வு இன்று காலை நடந்து முடிந்தது. இதுவரை நடந்து முடிந்த பாடங்களிலேயே இந்த கணித தேர்வு தான் மிக மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


காளான்களைப்போல் முளைக்கும் பொறியியல் கல்லூரிகள்: உயர் நீதிமன்றம் அதிருப்தி


            காளான்களைப் போல் முளைக்கும் ஏராளமான பொறியியல் கல்லூரிகளால் பொறியியல் கல்வியின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சாடியுள்ளது.
 
 

1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் கண்டறிய தேர்வு திறன் குறைந்த மாணவர் களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு பயிற்சி


            குமரி மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலையை கண்டறிய திறனறி தேர்வு அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
 
 

12th Study Material

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ?


       ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால்  சம்பளவிகிதம்  திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது.ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து  இந்த பொ துவான கா ரணியை கொண்டு (common multiplying factor ‘3(  இந்த  எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின்  pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழு விலு ம்  தொடர்ந்தால் கீழ்க்கண்ட வாறு எதிர்பார்க் கப் படும் ஊதிய விகிதம் அமையும்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive