Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகள உங்களுக்காக...


           கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகாரசம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில்இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
 

பிளஸ் 2 தேர்வில் பிட்: இடுப்பு வரை வெட்டப்பட்ட சுடிதார்: அவமானத்தால் கதறி அழுத மாணவிகள்

            தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவிகளில் இருவர், சுடிதாரின் கீழ்பகுதியில் விடைகளை எழுதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பறக்கும் படை அலுவலர்களின் உத்தரவால் அவர்களது மேலுடையில் இடுப்புப் பகுதி வரை வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த மாணவிகள் வீட்டுக்குச் செல்ல அவமானப்பட்டு கதறி அழுதனராம்.


ஆசிரியர் சுயவிவரங்கள் ஆன்லைன் பதிவு.

            தற்போது மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் பள்ளிகள் போன்றவற்றில் பணிபுரியும் தொடக்க நடுநிலை ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களும் ஆன்லைன் மூலம் உரிய வலைதளத்தில் (Part-I, Part-II) பதிவு செய்யப்பட்டுள்ளன.

அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு

               அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, வெளிமாவட்டங்களை சேர்ந்த தனியார் கம்பெனி மூலம், கருவிகள் வழங்கப்பட்டன. இதற்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தலைமை ஆசிரியர்களே உபகரணங்களை வாங்க, ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வியாண்டில், தனியார் கம்பெனி மூலம், அறிவியல் கருவிகள், அரசு உயர்நிலை பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறும் பணி துவங்கியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

12th Publick Exam | March 2014 | Key Answers

March - 2014 Exam | Key Answers
  • Biology - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
  • Botany - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
  • Accountancy - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
  • Accountancy - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
  • Chemistry - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
  • Chemistry - March 2014 | Public Exam | Expected 1 Mark Key Answers - Tamil Medium
  • Zoology - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
  • Maths - March 2014 | Public Exam | Expected KeyAnswers - Tamil Medium
  • Commerce - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
  • Physics - March 2014 | Public Exam | Expected 3 Mark Key Answers - Tamil Medium
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium

SG Scale Pay | அரசு தரப்பில் மேல் முறையீடா?

3 நபர் குழு அமைக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டும் அரசாணை வெளியிட தாமதம் ஏன்?அரசு தரப்பில் மேல் முறையீடா?

       6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

10th Centum Scored Model Answer Scripts

Maths Centum Scored Paper
  • Maths - J. Nivedha, GHS, Adhiyur, Vellore dt - TM - Click Here
  • Maths - J. Logesh, 10, ACS MHSS, Irumbedu, Thiruvannamalai Dt. -EM - Click Here

TRB PG TAMIL பி வரிசை கருணை மதிப்பெண்: நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?

       முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக கருணைமதிப்பெண் வழங்க நீதிமன்றத்தின் ஆணை மறுபரிசீலனை?நீதிமன்றத்தை நாட TRB முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.

பொது தேர்வுகளில் "ஜெல்' பேனா பயன்படுத்தலாமா?

            பொது தேர்வுகளில், "ஜெல்' பேனாவை பயன்படுத்தலாம்' என, கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது. பொது தேர்வுகளில், விடை எழுத, பெரும்பாலான மாணவ, மாணவியர், நீல நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர். சிலர், கறுப்பு நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர்.

குளறுபடிகள்: திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவு வாபஸ்.


              வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடந்தது.
 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 25- ஆம் தேதி கடைசி நாள்.


            வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு நாள்களே உள்ளன. வரும் 25- ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 

TET & PG TRB Court Case Deatil - Yesterday & Today (20.03.2014 & 21.03.2014 )

TET-PG Case (21.03.2014)

Today Detail (21.03.2014):

         TET-PG Case : இன்றைய ( 21.03.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

பிளஸ்–2 தேர்வு - மாணவ–மாணவிகள் கருத்து.

            பிளஸ்–2 தேர்வு: உயிரியியல், தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது வரலாறு தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்து.

முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூல் - சி.பி.எஸ் .சி பள்ளிகள்

           தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ்இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 

பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த கூடாது: கல்லூரி இயக்குநரகம் சுற்றறிக்கை


           நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு 

            குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

பொது அறிவு-அறிவியல் பிரிவு

இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ்திட்டம்

            அதென்ன ஜி.பி.எஸ் என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24 செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது.  இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே ஜி. பி.எஸ் (Global Positioning System) என குறிப்பிடப்படுகிறது.  மேற்கொண்டு ஜி.பி.எஸ் பற்றி  விளக்க முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும். 

Tnpsc group 2a exam date change to 29.6.2014

TNPSC GROUP 2 A ( Non Interview Posts ) Exam Date Changed.

Pay Continous Order

                தொடக்கக் கல்வி - கரும்பலகை திட்டத்தின் கீழ் 1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.1.2014 முதல் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு

           மா.க.ஆ.ப.நி. தேசிய அடைவுத் திறன் தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் நடத்த திட்டம்.

TET Not Qualified Teachers Regarding - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

              பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO-களுக்கு உத்தரவு 

தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் -பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு.


தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் முதல் வாரத்தில் 10% D.A தமிழக அரசு வழங்கும்.

TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தையல் மிஷின் மூலம்...


              தமிழகத்தில், பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகத்தின் சார்பில் நடத்தப்படும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த, 3ல் துவங்கி நடந்து வருகிறது. இது, இம்மாதம், 25ல் நிறைவடைகிறது. மாநிலம் முழுவதும், அரசு மற்றும் தனியார்பள்ளிகளைச் சேர்ந்த, எட்டு லட்சம் மாணவர், தேர்வு எழுதி வருகின்றனர்.

BA, MA முடித்த பின், +2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


                பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம் கூறப்பட்டது.
 

திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை; உயர் நீதிமன்றம் உத்தரவு

           திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும்  பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி கனிமொழி சென்னை  உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு படித்து  முடித்துவிட்டு 12ம் வகுப்பு படிக்காமல் டிகிரியை திறந்தவெளி  பல்கலைக்கழகத்தின் மூலம் படித்து முடித்தேன். பின்னர் பட்டமேற்  படிப்பை கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
 

மார்ச்29 (சனி), 30(ஞாயிறு) மற்றும் 31(திங்கள்) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என உத்தரவு

                 இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தேர்தல் பணியா, தேர்வுப் பணியா? ஆசிரியர்கள் தவிப்பு!

            சென்னை உள்ளிட்ட சில இடங்களில், இன்று தேர்தல் தொடர்பான பயிற்சி கூட்டங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில், இன்று, பிளஸ் 2 தேர்வுப் பணியும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எந்த பணிக்கு செல்வது எனத் தெரியாமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வுப் பணியில், முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
 

பிளஸ் 2 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்தல் வகுப்புக்கு வர அழைப்பு : குழப்பத்தில் தவிப்பு

                பிளஸ் 2 தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வரும்படி எஸ்எம்எஸ் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த தேர்வில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: ஊதிய நிலுவையை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை

               மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகையை வழங்குமாறு அங்கன்வாடி ஊழியர்கள் மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.ஆலந்தூர், ஆதம்பாக் கம், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள 56 அங்கன்வாடி ஊழியர்கள் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு நிறுத்திவைப்பு

            உயர் கல்வித் துறை உத்தரவைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த பேராசிரியர் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பச்சையப்பன் அறக்கட்டளை அதன் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 123 உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதவற்கான நேர்முகத் தேர்வை வரும் 26,27,28 தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive