Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பஸ்சில் இடம் பிடிக்கும் தகராறில் பள்ளி மாணவன் கழுத்து அறுப்பு சக மாணவர்கள் வெறிச்செயல்

            சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் தெற்கு தில்லை நகரைச் சேர்ந்தவர் கவியரசன் (14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல, அந்த பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக, சக மாணவர்கள் சிலருடன் கவியரசனுக்கு தகராறு ஏற்பட்டது.
 

பதிவு செய்தும் இன்னும் ஆதார் அட்டை கிடைக்கலையா? "ஆன்-லைனில்' பதிவிறக்கம் செய்ய வசதி

         உடற்கூறுகள் பதிவு செய்தவர்களில் இன்னும் பலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அதனால், "ஆன்-லைன்' மூலமாக, ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரிச்சை பழம்

         பித்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் மிக்கது பேரிச்சை. தொடர்ந்து பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். அன்றாடம் பேரிச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

அடிப்படை வசதிகள் கேட்ட பள்ளி மாணவன் சஸ்பெண்ட்

          திருச்சி, உறையூர் நாச்சியார் பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் சந்தோஷ், 17, இவர், திருச்சி, தில்லைநகர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வகுப்பறையில், மின் விளக்கு, மின் விசிறி உள்ளிட்டவை செயல்படுவது இல்லை. குடிநீர் வசதி இல்லாததால், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்

          கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே, சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான்.
அவனுடைய தனித்திறமை குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால், சேசுராமுக்குள் ஒளிந்திருந்த இந்த திறமை, எப்படி உருவானது என, அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன நடந்தது?சேசுராமுக்கே அவனது திறமை குறித்து கேட்டால், தெரியவில்லை. 'தெரியும்' என்று மட்டுமே கூறுகிறான். 
 

இந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்!

         இந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில், இளநிலைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

TNPSC Group 4 Study Material

TNPSC Group 4  Study Material- Schedule 5



Computer Instructor: Vilupuram District Seniority List

District wise Seniority List (Real Copy):


பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி

பிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிளஸ்–1 தேர்ச்சி மதிப்பெண்ணில் வேறுபாடு
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிளஸ்–1 வகுப்பில் நன்றாக படித்தால் தான் பிளஸ்–1 தேர்ச்சி பெற்று பிளஸ்–2 படிக்க செல்லமுடியும்.

பிளஸ்–1 வகுப்பில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பள்ளியிலும் மாறுபட்ட மதிப்பெண் உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களை கொண்ட தேர்வுக்குழு உள்ளது. அந்த தேர்வுக்கு குழு பரிந்துரைத்த மதிப்பெண்ணை கொண்டுதான் தேர்ச்சியா? தோல்வியா? என்பதை அந்த பள்ளி முடிவு செய்கிறது.

பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை
குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்–2 தேர்ச்சி விகிதம் 100–க்கு 100 இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிளஸ்–1 தேர்ச்சி சதவீதத்தை அதிக அளவில் வைக்கிறார்கள்.

இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டு சீனியர் வக்கீல் டி.முத்தரசன் அரசுக்கு குறிப்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீத மதிப்பெண்ணை விட அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் அதிகமாக உள்ளது. அதுவும் பள்ளிக்கூடத்திற்கு பள்ளிக்கூடம் மாறுபடுகிறது.

அரசு குறிப்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவற்றில் பிளஸ்–1 மாணவ–மாணவிகளுக்கு தேர்ச்சி பெற ஒரே வித மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால் வருடந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெயிலாகி விடுகிறார்கள். அதனால் அவர்கள் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மேலும் பிளஸ்–2 படிக்காமல் படிப்பை நிறுத்திவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளாக இருந்தாலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளாக இருந்தாலும் சரி எந்த பள்ளிகளாக இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. இந்த மதிப்பெண் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அமலில் உள்ளது.

35 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி, தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 35–க்கும் அதிகமாக நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி அந்த பள்ளிகள் எந்த பள்ளிகள் என்று தெரிந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு த.சபீதா தெரிவித்தார்.

ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாகும் மாணவர்கள்; ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்

           ஆபாச வலைதளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அடிமைகளாகி வருவதாக, ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்செயல் விடுப்பு விதிகள்

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.


ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை: யுஜிசி அறிவிப்பு

      சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை அறிவித்துள்ளது.

மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தையா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை

         'மதி இறுக்கம் என அழைக்கப்படும், மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றம்

           இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றப்பட்ட தகவல், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படாததால், நேற்று தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு நேற்று துவங்கியது. இதற்கான அட்டவணை, சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.
 

EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை


emis online website address   :click here www.emis.tnschools.gov.in

undefined

அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்

            அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் குறைந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் மக்களிடையே வளர்ந்து வரும் ஆங்கில மோகம் தான். 
 

அறிவியல் தினம்: பெரிய அளவில் கொண்டாட கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்


       தேசிய அறிவியல் தினத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை

         சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தவேண்டும் போலீசார் கண்டிப்பான உத்தரவு

        சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி

         உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

தமிழகத்தில் காற்று வாங்கும் தொடக்கப்பள்ளிகள் : 4 மாணவர்களுக்கு பாடம் நடத்த 2 ஆசிரியர்கள்

         பல தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிகையிலேயே மாணவர்கள் படிக்கின்றனர். சேர்க்கையை அதிகரிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில வழிக் கல்விமுறையும் கைகொடுக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

          புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் ந.சுப்பிரமணியன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். மிகச் சிறந்த படைப்புகள் தேர்வு.

TRB மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்

          அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வேளாண்மை கல்வி கற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அரசு உத்தரவுப்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா 25 பேர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் விபுநய்யரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை: யுஜிசி அறிவிப்பு

          சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

படிப்பறிவு இல்லாமல் 28 கோடிப் பேர்: ஆளுநர் கவலை

          இந்தியாவில் 28 கோடிக்கும் அதிகமானோர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கூறினார். கல்வி- சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியது:

ஓர் அரசு ஆரம்பப்பள்ளி - ஒரு ஆசிரியர் - ஒரு மாபெரும் புரட்சி

         ஓர் அரசு ஆரம்பப்பள்ளி - ஒரு ஆசிரியர் - ஒரு மாபெரும் புரட்சி -ஒரு பதவி உயர்வு - ஒரு முழு கிராமம் - ஒரு பாராட்டுவிழா - மனதார வாழ்த்துவோம்

 

விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்

         கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive