Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

         ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
 

முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு

          முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்டது. இதில், சென்னை உள்ளிட்ட, முக்கிய மாவட்டங்களில் உள்ள, பணியிடங்கள் காட்டப்படவில்லை.

ஈஷா அறக்கட்டளை நடத்தும் சம்ஸ்கிருத பள்ளிக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி:

      ஈஷா அறக்கட்டளை நடத்தும் சம்ஸ்கிருத பள்ளியில் மாணவர்களை சேர்க்கத் தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்குரைஞர் எம்.வெற்றிச் செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
 

உயர் நீதிமன்றத்தில் தட்டச்சர் பதவி: வரும் 6 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு டி.என்.பி.எஸ்.சி. தகவல்.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.


அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள்: 2 நாள்களுக்கு இரவு 8 மணி வரை நீட்டிப்பு

        மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா': கடுப்பான கல்வி அதிகாரி

         சிவகங்கையில் நடந்த உதவித் தொகை வழங்கும் விழாவில் பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. கடுப்பான மாவட்ட கல்வி அதிகாரி நல்லமுகமது, 'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா?' என கடிந்து கொண்டார்.
 

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: புத்தகங்கள் விற்பனைக்குத் தயார்


 
      வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

       செந்துறை தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  .இது குறித்து, செந்துறை வட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள ஆதனங்குறிச்சி,மணக்குடையான்,பெரியாக்குறிச்சி ஆகிய வருவாய் கிராமங்கலில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு

          அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நுட்ப மைய மண்டல திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நடுநிலை, உயர்நிலை பள்ளி விழாவுக்கு மத்திய அரசு நிதி; துவக்க பள்ளிகளுக்கு இல்லை

           அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு எழுத தடை: சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

          10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்காததால் பெற்றோருடன் மாணவர்கள் நேற்று திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 

ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்

ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்
      ஆந்திராவில் வெண்ணிலா, கருடா, கருடா பிளஸ் என்ற பெயரில் அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் வருகிற ஏப்ரல் 1–ந்தேதி முதல் இண்டர்நெட் வைபை வசதி செய்யப்பட உள்ளது.
 
 
 

சைனிக் பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு

          சைனிக் பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் சார்பில், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

செல்போன் கட்டணம் உயர்கிறது: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு

    தொலை தொடர்புக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள்


வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள்

          இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ தயாரித்த கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்–1டி செயற்கைகோள் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.

புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம்

              பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது.

100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?

          100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல பள்ளிகளில், சரியாக படிக்காத, தேர்ச்சியடைவார்கள் என்ற நம்பிக்கையில்லாத மாணவர்களை, சிலபல காரணங்களைக் கூறி, பள்ளி நிர்வாகமே, தேர்வெழுத விடாமல் தடுக்கிறது என்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன.

இயற்பியல்வினாத்தாளில் சிக்கலான, தெளிவற்ற கேள்விகளால் முழு மதிப்பெண் பெறுவதில் சிக்கல்


          நேற்று(27.03.15) நடைபெற்ற இயற்பியல் தேர்வில் பத்து, ஐந்து மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன; அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன்இருந்த அதே தருணத்தில், ஒரு-மதிப்பெண் வினாக்களில்ஐந்து/ஆறு வினாக்கள் சிக்கலாகவும் தெளிவற்ற சொல்லாடல்களாகவும் இருந்ததால் மாணவர்கள் குழம்பினர். பலர் நெடுநேரம் சிந்தித்தும் என்ன கேட்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை என்று கூறும் நிலை.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

              தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!

             CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

              அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்


இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்
           ஐ-போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை  வெளியிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

          'பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்விலும் குழப்பம்

           நேற்று நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், சில கேள்விகள் பிழையாகவும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி' டைப் வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 14 வது கேள்வியில், '400 ஆம்ஸ்ட்ராங் அலைநீளமுள்ள ஒரு ஒளியானது 2 மைக்ரோ மீட்டர் தொலைவு கடந்த பிறகு உருவாக்கம் கட்ட வேறுபாடு' என கேட்கப்பட்டது.
 

பொதுத்தேர்வில் பழைய வினாத்தாள்: வரிசை மாறாமல் 'அப்படியே' கேள்விகள்

           ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 திருப்புதல் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள், 'அப்படியே' பொதுத்தேர்விற்கும் வழங்கப்பட்டது.

10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு

           தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதே போல 14 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு

            அகஇ - மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு - வழிமுறைகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

பொருளியல் வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

          பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் 'புளு பிரின்ட்' படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி 'பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக' என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது. 
 

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி: பீகாரில் தொடக்கம்


பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி: பீகாரில் தொடக்கம்

         பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது.  
 

இந்த மாதம் கடைசி நாளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணப்பயன் உறுதி

        பகுதிநேர பயிற்றுநர்களின் 2015 மார்ச் மாத ஊதியமும், ஏப்ரல் 2014 லிருந்து அக்டோபர் 2014 வரையிலான காலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையும் 31.3.2015 க்குள் வழங்கி, உரிய பதிவேடுகளில் பதியப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

பல்கலை மாணவர்களுக்கு பாடம் எடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்!

        கழிவுப் பொருட்களை கலை நயமிக்க பொருட்களாக மாற்றுவது எப்படி என, பொறியியல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தி அசத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் அட்டை பெறும் வசதி: தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்

                மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இன்று புதிய வாக்காளர் அட்டை மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று தொடங்கி வைத்தார்.
 

செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல் 1 முதல் அமல்

           நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான அரசின் உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive