Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா': கடுப்பான கல்வி அதிகாரி

         சிவகங்கையில் நடந்த உதவித் தொகை வழங்கும் விழாவில் பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. கடுப்பான மாவட்ட கல்வி அதிகாரி நல்லமுகமது, 'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா?' என கடிந்து கொண்டார்.
 
             சிவகங்கையில் தேசிய பசுமைப்படையில் சிறந்து விளங்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.20 ஆயிரம்; உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் விழா நடந்தது. மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் 15 பள்ளிகளுக்கு இந்த உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதி உதவியை பெற பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வரவில்லை. அவர்களுக்கு பதில் உதவியாளர்களே வந்திருந்தனர்.

கடிந்த அதிகாரி:

இதில் கடுப்பான மாவட்ட கல்வி அதிகாரி நல்லமுகமது, ''தலைமை ஆசிரியர்கள் அதிகம் வராதது வேதனை அளிக்கிறது. இது தவறு. எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா. இனி இந்த நிலையை அனுமதிக்க மாட்டேன்,'' என எச்சரித்தார். விழாவில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive