Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி


சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி

    மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

          அங்குள்ள சிருடி என்கிற கிராமத்தில், 1-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன், இன்று காலை வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அவனருகே சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சிதறிய சில்லுகள் அச்சிறுவனின் உடலைத் துளைத்து கடும் தீக்காயங்களையும் ஏற்படுத்தியது.
சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் பெற்றோர், அவனது உடலில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து, அவசர அவசரமாக அருகிலுள்ள சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

சிறுவனது உயிர் போகக் காரணமாக இருந்தது, சீனாவில் தயாரிக்கப்பட்ட மலிவு விலை செல்போன் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive