Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சான்று கிடைக்குமா, இல்லையா? தவிக்கின்றனர் மாணவர்கள்

பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்

      அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

          பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது. 

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?

          பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பிற மாவட்டத்துக்கு இடம் மாற்ற தடை : பள்ளி கல்வித்துறை அதிரடி

         தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் அதிகபட்சம் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. 

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆசிரியர் தம்பதி உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் படிப்பிற்கு உதவ, அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியர் உடல் தானம் செய்தனர்.சிவகங்கை காளையார்கோவில் அருகிலுள்ள மரக்காத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பெஞ்சமின்,45. இவரது மனைவி சகாயமேரி,39. இவரும், செவல் புஞ்சை அரசு பள்ளியில் ஆசிரியை. 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உதவியால் இந்திய வருவாய்த்துறை பணிக்கு கூலித்தொழிலாளி மகன் தேர்வு தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம்

    பள்ளி படிப்பு முதல் என்ஜினீயரிங் படிப்பு வரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செய்த கல்வி உதவி தொகையால் கூலித்தொழிலாளி மகன் இந்திய வருவாய்த்துறை பணிக்கு தேர்வாகியுள்ளார். அவர் தனது வெற்றியை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கத்துடன் கூறினார்.

பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்

       இந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன. 

மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி

          பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

மாணவியருக்கு புது 'நாப்கின்'

          பள்ளி மாணவியர், வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 'நாப்கின்' வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர, சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது. வளர் இளம்பெண்கள் மற்றும் அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச 'நாப்கின்' வழங்கும் திட்டத்தை, 2012ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு

       தோட்டக்கலைத் துறையில், 183 அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன; இதை நிரப்ப, இரு ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. ஆனால், தேர்வு முடிவு அறிவிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது; 

சுகாதார புள்ளியியலாளர்-உதவியாளர் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

          வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர், புள்ளியியல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.  இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளி, கல்லுாரிகளில் வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த கோரிக்கை

        பெற்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

         வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.

TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன்

மதிப்பிற்குறிய நண்பர்களே,


        அரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தாலே போதுமானது வெற்றி என்பது உறுதி. TNPSC  கடந்த 3 ஆண்டுகளில் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அதற்கேற்ற முறையில் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

குரூப் 4 வெற்றி பெற வேண்டுமா

  •   சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கொண்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களை படித்தாலே வெற்றி பெற

12th Computer Science Study Material

12th Computer Science Study Material
  1. Computer Science Study Material 5 Marks | K. Varadharajulu HrSS - Tamil Medium
Thanks to Mr. THANIGAI MADHAVAN S K

12th Study Material

Tamil
  1. Tamil Study Material | Mr. Navaneethakrishnan- Tamil Medium
Commerce
  1. Commerce Study Material | Mr. Navaneethakrishnan - Tamil Medium
Economics
  1. Economics Study Material | Mr. Navaneethakrishnan - Tamil Medium
Prepared by Mr. Navaneethakrishnan

நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள வீட்டின் தூசி, துரும்புகள் போதும்!


நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள வீட்டின் தூசி, துரும்புகள் போதும்!

‘உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று சொல்கிறேன்’ என்ற பழமொழியை தகர்த்தெறியும் வகையில், நம்மைப் பற்றி அறிய வீட்டிலுள்ள தூசி, துரும்புகள் போதும் என சொல்லும்படி சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

கொஞ்சம், கொஞ்சமாக நம்மையும் இயந்திரமாக்கும் மின்னணு சாதனங்கள்


கொஞ்சம், கொஞ்சமாக நம்மையும் இயந்திரமாக்கும் மின்னணு சாதனங்கள்

‘வால்-இ’ என்கிற படத்தில், பூமி நாசமடைந்து, மனிதன் வாழத்தகுதியற்று போனபின்னர் 700 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதன் நடக்கத் தெரியாமல், படுத்தபடியே நகரும் சாதனம் ஒன்றில், எதிரில் வரும் யாரையும் கண்டுகொள்ளாமல், டேப்லட் போன்ற ஒரு சாதனத்தின் வாயிலாக இன்னொரு மனிதனிடம் உரையாற்றுவான்.

சத்துணவு பணியாளர்களுக்கு GPF தொடக்கம்!

      சமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு 

20 நிமிடங்களில் முடிந்த கலந்தாய்வு

        மதுரையில் நடந்த சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வுநேற்று 20 நிமிடங்களில் முடிந்தது. இளங்கோ மாநகராட்சி பள்ளியில், மாவட்டத்திற்குள்ளான அரசு பள்ளிகளில் கூடுதல் மற்றும் காலிப்பணியிடங்களில்கணிதம் ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடந்தது.
 

மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஏற்பாடு

        பள்ளிகளில் கலை பண்பாட்டுத்துறை துவங்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடக்க கல்வி பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

          சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

       சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில்760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன. 

Teachers Day Regarding Instructions - Kovai CEO Proceeding

பொதிகை தொலைக்காட்சியில் திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி

     "திரு.தாமஸ் ஆண்டனி" அவர்கள்  பொம்மலாட்டம் வழியில் மாணவர்களுக்கு கல்வியை எளிமையாக கற்பித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும் மதிப்பிற்குரிய   ஆசிரிய பெருமக்களுக்கு, வருகின்ற  31-08-2015  திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி முடிய திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின்" பொம்மலாட்ட வழி  கற்பித்தல் " தூர்தர்சன் நிகழ்ச்சியானது பொதிகை தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு   திரு.தாமஸ் ஆண்டனி அவர்களின்  ஒளிப்பரப்பாக உள்ளது.
 

12th Accountancy Study Material


Accountancy
  1. Accountancy | 5 Marks & 12 Marks Important Questions | A. Boopathi - Tamil Medium
Thanks to Mr. A.Boopathi., M.Com., B.Ed., M.Phil

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive