Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா...!!!

         தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும்ஏழை,எளிய,கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்படமாக கொண்டுவர வேண்டும்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .


பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது

       பி.எட். படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தது. 2-வது கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர்களுக்கும், கணிதம் படித்த மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.


வாக்காளர்கள் பெயர் சேர்க்க 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

         வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை இம்மாதம் 24-ம் தேதி வரை அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:


உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

       உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தேஇத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளலாம்.


செல்வமகள் திட்டம்: டிசம்பர் 2-ந் தேதி வரை 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

           உலக தபால் தினம் மற்றும் அஞ்சல் மன்றத்தின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை வெளியிடும் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவில், தலைமை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சல் துறை தலைவர் (தபால் மற்றும் விற்பனை மேலாண்மை) வெங்கடேஷ்வரலு ஆகியோர் சிறப்பு தபால் உறை மற்றும் முத்திரையை வெளியிட அஞ்சல் மன்ற உறுப்பினர்கள் திருக்குறள் பாஸ்கரன், ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா

          கல்வித்தகுதி அறிவியல்: * பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

அரசு உதவித்தொகையில் விதிமீறல்; மீண்டும் ஆய்வு நடத்த கோரிக்கை

          ரெட்டியார்சத்திரம்: மணமாகாத, கணவருடன் வசிப்போருக்கு விதவை உதவித்தொகை, இறந்தவர்கள் பெயரில் வினியோகிக்கப்பட்ட உதவித்தொகை குறித்த புகார்கள் மீது மறு ஆய்வு செய்ய வேண்டுமென, முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 

தேர்வில் காப்பி அடிக்க உதவும் நூதன கருவி உடை விற்பனை: தனியார் உளவு நிறுவன இயக்குநர்கள் கைது

         தேர்வுகளில் காப்பி அடிக்க உதவும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட உடைகளை தயாரித்து விற்றதாக, டெல்லியில் இருவர் சிக்கியுள்ளனர். 

சமூக வலைதளங்களை கண்காணிக்க தயாராகும் மத்திய அரசு

        வெறுப்புப் பிரச்சாரங்கள், மதச்சாய கருத்துகள் பரவாமல் தடுக்க சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் பக்ரீத் பண்டிகையன்று வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரவிய வதந்தியையடுத்து முகமது இக்லாக் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். 

நீலகிரி: முன்மாதிரியாகத் திகழும் குக்கிராம அரசுப் பள்ளி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அனைத்து செயலிலும் பிற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
ஆங்கிலம் கற்பது அவசியமாகியதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றியமைத்தது.
 

Hike Messenger புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல்வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்

சென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்பமுடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம். 

கல்வி அதிகாரியின் திடீர் சோதனையின் போது வெறிச்சோடிய பள்ளி: 3 ஆசிரியர்கள் நீக்கம்

         ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் இயங்கி வரும் க்ரீன் குத் பத்ரி பெஹ்ரோட் துவக்கப் பள்ளியில், கல்வித் துறை அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, பணிக்கு வராத 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

மாணவர்களுக்கு போதை ஊசி!

       நாகர்கோவிலில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, போதை ஊசி சப்ளை செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர். 

ஆசிரியர்கள் போராட்டம்; மாற்றுப் பணியில் சிறப்பு ஆசிரியர்கள்

        ஆசிரியர் இயக்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பாதிப்பில்லை என சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.

பல்கலை துணைவேந்தருக்கு கட்டாய விடுமுறை அளிக்க பரிந்துரை

        ஓய்வு பெற இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், டில்லி பல்கலைக்கழக துணைவேந்தரை, கட்டாய விடுமுறையில் செல்ல உத்தரவிடுமாறு, ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. 

ஊராட்சி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம்மறுப்பு

               அதிக வருமானம் உள்ள ஊராட்சிகளில் வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊராட்சி நிர்வா கத்தில் இருந்தே அவர்களுக்கு ஊதியம் வழங்கத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.


சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி.

       நாடு முழுவதும் 4600 கிளைகளுடன் 42 ஆயிரம் பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப்இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள In charges for FLCCs பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஏழை மாணவர்களுக்கு உதவும் ‘ஸ்மைல் கிளப்’ சென்னையில் தொடக்கம்

         ஏழை எளிய மாணவர்களுக்கு உத வும் ஸ்மைல் கிளப் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கப்பட்டது.ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கும் வகையிலான இந்த ஸ்மைல் கிளப்பை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.


10th English New Study Material

"பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் பரிமாற்ற முறை மதிப்பீடு கூடாது'

       பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களைப் பரிமாற்ற முறையில் மதிப்பீடு செய்யக்கூடாது என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊதியத்தைத் தீர்மானிக்கும் முடிவு எம்.பி.க்களிடமே இருக்க வேண்டும்'

        ஊதியம், இதர படிகளைத் தீர்மானிப்பதில் தங்களுக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குமாறு, மத்திய அரசிடம் எம்.பி.க்கள் ஊதியத்துக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்தது. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கட்சிக் கொறடாக்களின் தேசிய மாநாடு அண்மையில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமானச் சான்று வழங்க உத்தரவு

       பள்ளி மாணவ, மாணவியருக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமான, இருப்பிடச் சான்றுகளை வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

பொறியியல் பணித் தேர்வு: நேர்காணல் அக். 27-இல் தொடக்கம்

      ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆதார் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

        ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைப்பது குறித்து, வெள்ளிக்கிழமை (அக். 9) மாலைக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
 

கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு

       ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.சென்னை போரூரில் நடந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதியதலைமுறையின் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார்.

வாட்ஸ்அப்பில் ஆட்சேப கருத்து: அட்மின் கைது

         மும்பை: வாட்ஸ்அப் குழு ஒன்றில் ஆட்சேபகரமான கருத்து மற்றும் வீடியோ பரிமாற்றத்துக்கு அனுமதித்ததாக, அந்த குழுவின் அட்மினை போலீசார்  கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சாகுர் பகுதியில் இருந்தவர்கள் இந்த கருத்து மற்றும் வீடியோவை பரிமாறி  உள்ளனர்
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive