Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிளஸ் 2 தேர்வு: தனித் தேர்வர்கள் தத்கலில் விண்ணப்பிக்க நாளை கடைசி
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இதுவரை
விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க
வியாழக்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் ஊதியம் பிடித்தம் செய்ய கணக்கெடுக்கும் பணி
கரூர் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிப்பதற்கான கணக்கெடுக்கும் பணி
தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமசாமி
தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பணி இடங்களை அடையாளம் காண வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழக
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானாலும், அரசு துறைகளில்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டிய பணி இடங்களை அடையாளம் கண்டு அது
தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
6 - 11 வகுப்புகளுக்கு ஆண்டு தேர்வு அறிவிப்பு
தமிழக
பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான வுகுப்புகளுக்கு, ஆண்டு
தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்., 21ல், அனைத்து தேர்வுகளும்
நிறைவடைகின்றன. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியே
பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன் விவரம்:
இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்க நிரந்தர எண்
தமிழகத்தில்
வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. இதில் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வை 11 லட்சத்து 79 ஆயிரத்து 500 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2
தேர்வை 8 லட்சத்து மேற்பட்டவர்களும் எழுத உள்ளனர். பொதுத்தேர்வு விடைத்தாள்
முதல் பக்கத்தில் மாணவர்களின் புகைப்படம், பார்கோடிங் முறை என
அடுத்தடுத்து தேர்வு துறை சார்பில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு
வருகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக 14 இலக்கம் கொண்ட நிரந்தர யுனிக் ஐடி
எண் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Centum Coaching Team - Special Question Paper - 10th Maths
Prepared by, Mr. Thagadur .C. ANBU M.Sc., M.Phil.,B.Ed.,
2.50 லட்சம் ஆசிரியர்கள் கைது; மாலையில் விடுதலை
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்
போராட்டங்களில் ஈடுபட்ட 2.50 லட்சம்ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலை 369 உதவிப் பேராசிரியர்கள்,அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 369 உதவிப் பேராசிரியர்கள், தமிழகத்தில்
உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 3
ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என துணைவேந்தர்
பேராசிரியர் செ.மணியன் தெரிவித்தார்.
ரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செகேந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு மத்திய
ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரயில்வே
பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில்
நிரப்பப்பட உள்ள 2030 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான இந்திய குடியுரிமை
பெற்ற பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரை 10,535 பணியிடங்கள் காலி
சேலம்: தமிழக வருவாய் துறையில், கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரையில்,
10,535 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடத்தால் இரண்டு, மூன்று
பணியிடங்களை, ஒருவர் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலியிடங்களை
நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்
துறை அலுவலர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் பல்வேறு
துறைகளில், காலிப்பணியிடங்கள் ஏராளம் உள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 1 நாள் ஊதியம் கட்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், புதியசம்பளகொள்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப்பள்ளிமற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று (பிப்ரவரி1ம் தேதி) மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனை வசதிகள் இருந்தாலும், கல்வியறிவு இன்றி எதுவும் சிறக்காது (DINAKARAN)
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை பள்ளி வரை தமிழ்மொழி வழி கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனர்.
ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆசிரியர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதில், தள்ளுமுள்ளு
ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' நடத்திய போராட்டத்தால், நேற்று வகுப்புகள் நடைபெறாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, ஜாக்டோ நடத்திய போராட்டம், மூன்றாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளி விடுமுறை என்பதால், போராட்டத்தால் பாதிப்பில்லை. ஆனால், நேற்று வேலை நாள் என்பதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் ஆசிரியர்கள் மறியலில் கைதாகினர்.
பள்ளியை திறந்து பாடம் நடத்த சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு!
பள்ளியை திறந்து பாடம் நடத்தும்படி அதிகாரிகள் கூறுவதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 30ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. பிப்., 1ம் தேதி அனைத்து பள்ளிகளையும் மூடி மறியல் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.
கட்டுமான பணி நிதியை கேட்கும் கட்சியினர் திணறும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்
மதுரையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.) கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 'கட்டிங்' கொடுக்கும் பிரச்னையை சமாளிக்க முடியாமல் தலைமையாசிரியர்கள் திணறுகின்றனர்.
பொதுத் தேர்வு மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' : தேர்வுத்துறை ஏற்பாடு
''பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 'யுனிக் ஐ.டி.,' எண்கள் (தனித்துவ அடையாள எண்) வழங்கப்படவுள்ளது,'' என தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: