Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.10.21

  திருக்குறள் :

அதிகாரம்: அறிவுடைமை 

குறள் : 430

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.

பொருள்:
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

பழமொழி :

After dinner sit a while


உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.


2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.

பொன்மொழி :

நாம் அளவுக்கு மீறிய ஆசையால் தூண்டப்படுகிறோம். தூண்டப்பட்டதனால் ஆசைப்படுகிறோம் .----- கௌதம புத்தர்

பொது அறிவு :

1." உயிர் காக்கும் உன்னத உலோகம் " என அழைக்கப்படும் உலோகம் எது? 

ரேடியம்.

2." கருப்பு ஈயம் " என்றழைக்கப்படும் தாது எது? 

கிராபைட்.

English words & meanings :

Palate - The roof of the mouth மேல் வாய், 

Palette - board for mixing colours. வண்ணங்கள் கலக்கும் பலகை

ஆரோக்ய வாழ்வு :

வேர்க்கடலை: பல ஆரோக்கிய நன்மைகளின் கலவை




நிலக்கடலை ஒரு சுவையான உணவு. இது குளிர்காலத்தில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் வேர்க்கடலையில் உள்ள ஏராளமான நன்மைகளால் அது ஒரு சூப்பர்ஃபுட் அதாவது மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது. 

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பின்வரும் நன்மைகள் கிடைக்கும். 

- தோல் பிரச்சனைகளில் (Skin Problems) இருந்து நிவாரணம் கிடைக்கும்.

- செரிமானம் சரியாகி மூளை திறன் அதிகரிக்கும்.

- இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

- அதிக நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும். 

கணினி யுகம் :

Ctrl + Shift + # - Format number in date format 

Ctrl + Shift + % - Format number in percentage format

நீதிக்கதை

 ரூபாய் நோட்டு

ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.

செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.

மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.

இம்முறை ரூபாய் நோட்டினை காலில் மிதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.

கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

இன்றைய செய்திகள்

22.10.21

★ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் மேகவெடிப்பு காரணமாக, ஒரே நாளில் 213 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதனால், வசிஷ்ட நதியில் வெள்ளம் ஏற்பட்டு, ஆத்தூர் தடுப்பணை நிரம்பியது.


★மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

★12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

★கடந்த1990ம் ஆண்டு இந்தியா இருந்ததைவிட, தற்போது 15 சதவீதம் கூடுதலாக வெப்பத்தால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்று லான்சென்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

★பிரான்ஸில் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் 2 லட்சத்துக்கு அதிகமான வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

★ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு.

Today's Headlines

🌸 213 mm of rain fell in one day due to cloudburst at Bethanayakkan camp next to Athur.  The rain poured down.  As a result, the Vashishta River flooded and the Attur dam overflowed.


 🌸 The science proficiency test looking for young scientists among students will take place on November 30th and December 5th.  You can apply by October 31 to participate in this exam.

 🌸 The Directorate of State Examinations has announced that the results of the Class 12 bye-examination will be released tomorrow at 11 am.

 🌸 The Lancet study found that India is now 15 percent more likely to be affected by heat than it was in 1990.

 🌸More than 2 lakh homes in France have been left without electricity due to the uprooting of trees in various places due to the storm.

 🌸 Schedule released for the Junior World Cup of Hockey.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

BRTE - List After Zero Counseling

illam thedi kalvi ( ITK ) - Programme Guidelines

.com/img/a/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.10.21

   திருக்குறள் :

அதிகாரம்: அறிவுடைமை

குறள் : 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

பொருள்:
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

பழமொழி :

Come in events cast their shadow before.


யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.


2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.

பொன்மொழி :

வைராக்கியம்,அகந்தை,பிறப்பு, இறப்பு,மூப்பு,பிணி,இவைகளால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவற்றையும் சிந்தித்து உணர்வது தான் ஞானியின் இயல்பு --- கீதை

பொது அறிவு :

1.இந்திய அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை? 

22 மொழிகள். 

2. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு எது? 

இந்தியா.

English words & meanings :

Until the cow comes home (Idioms )-to wait for a long time, 

burn the bridges - destroy or cut off the ways to go back

ஆரோக்ய வாழ்வு :

வெங்காயத் தாளின் மருத்துவ பயன்கள்






உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயதாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது.

வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.

வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும்.இதில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.

கணினி யுகம் :

Ctrl + Shift + ! - Format number in comma format 

Ctrl + Shift + $ - Format number in currency format

அக்டோபர் 20

ஆனி சலிவன் அவர்களின் நினைவுநாள்  




ஆனி சலிவன் (Anne Sullivan) (1866 ஏப்ரல் 14 - 1936 அக்டோபர் 20 ) இவர், தலைசிறந்த ஆசிரியரும், பார்க்கவும் கேட்கவும் இயலாத எலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவருமாகவும் அறியப்படுகிறார். கண் பார்வையற்ற, காது கேளாத, பேசும் திறனும் அற்ற குழந்தையான ஹெலனுக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் w-a-t-e-r என்று மீண்டும் மீண்டும் எழுதி மனதில் அறியவைத்தார். அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது. ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் புடையெழுத்து (பிரைய்லி (Braille) முறையையும் கற்றுக்கொடுத்தார். இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் 70-வது வயதில் காலமானார்.

நீதிக்கதை

நண்பகல் தூக்கம்

ஒரு நாள் மத்தியம் வெயில் அதிகமாக இருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். 

அந்த வழியாக வந்த ஒரு விறகுவெட்டி அவனைப்பார்த்து, இவன் கடுமையான உழைப்பாளி போல தெரிகிறது. உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படி உறங்குகிறான் என நினைத்துக் கொண்டுச் சென்றான். 

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான். அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான். 

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் வந்தான். காலையிலேயே நன்றாக குடித்துவிட்டும் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டுச் சென்றான். 

சற்று நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் என அவரை வணங்கிவிட்டுச் சென்றார். 

நீதி :
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே.

இன்றைய செய்திகள்

20 .10.21

◆ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


◆சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், 6 இடங்களில் சார்ஜிங் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.


◆நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்: முதல்வர் 
 ஆய்வு.

◆ கீழடி அகழ்வாய்வு தளத்தில் முதன் முறையாகக் கண்டறியப்பட்ட ‘மீன் சின்ன பொறிப்புடன்’ கூடிய உறை கிணறு

◆கேரளாவில் கனமழை, நிலச்சரிவால் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

◆தமிழக அரசு, ஐரோப்பிய தமிழர்கள் நிதியால் கொலோன் பல்கலை. தமிழ் பிரிவு நீட்டிப்பு.


◆கனடாவில் 5 முதல் 11 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வேண்டுகோளை அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பைஸர் நிறுவனம் வைத்துள்ளது.


◆ஆப்கானிஸ்தான் தொடர்பாக ரஷ்யா நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

◆பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி, ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

◆டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிதம்பி சக வீரரான பிரணீத்துடன் விளையாடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.

Today's Headlines

 🌸 The government has raised the age limit for direct appointment of teachers from 40 to 45.


 🌸Work is in full swing to operate 100 electric buses on various routes in Chennai by next January.  In addition, charging stations are to be set up at 6 locations.


 🌸  For setting up  seawater treatment plant at Nemmely the work has been speed up : Chief Minister done Inspection on that.

 🌸 In Keezhadi Evacuation first time a covered well was discovered with the inscription of Fish 

 🌸Heavy rains and landslides in Kerala have claimed 35 lives so far.

 🌸 Government of Tamil Nadu, University of Cologne funded by European Tamils.  Tamil section extended.


🌸 Pfizer  has placed a request to the Canadian Department of Health to vaccinate 5- to 11-year-olds in Canada.


 🌸The United States has said that they would not take part in Russia's talks about Afghanistan.

 🌸 England's Cameron Nori and Spain's Bala Padosa won and achieved the Baribas Open tennis championship

🌸 Kitambi of India wins first round at the Danish Open Badminton with his teammate Praneeth.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive