NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறி

          ராமநாதபுரம்:அரசுப்பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
       அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய 2016 ஜன. முதல் பள்ளி மேலாண்மைக்குழுவால் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

துவக்கப்பள்ளிக்கு மாதம் 750 ரூபாய், நடுநிலைப்பள்ளி க்கு 1000 ரூபாய், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு 1,500 ரூபாய் என பணியாளர்களுக்கு மாத சம்பளமாக வழங்கப்பட்டது. அக்டோபர் முதல் நான்கு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இவர்களுக்கான சம்பளத்தொகை வழங்கப் படுவது வழக்கம். நான்கு மாதங்களாக இந்த தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கழிப்பறைகள் மட்டுமின்றி, வளாகத்தையும் இந்த துப்புரவு பணியாளர்களே கவனிக்கின்றனர். இதனால், பணிக்கு வருவதை தவிர்க்கும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இதனால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive