மேலும் 15 நாள்களுக்கு ரூபல்லா தடுப்பூசி முகாம் நீட்டிப்பு

       ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரூபல்லா தடுப்பூசி முகாம் பிப்ரவரி 6-இல் தொடங்கியது. 
 
         9 மாதம் நிறைவடைந்த குழந்தை முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்களுக்கு தடுப்பூசி போட அங்கன்வாடி மையங்கள், அரசு-அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 


மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1.8 கோடி குழந்தைகளுக்கு ரூபல்லா தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையின்றி... இந்த நிலையில், முகாம் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.


இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் விடுமுறையின்றி தொடர்ந்து 15 நாள்களுக்கு இந்தத் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive