NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கப்பல் விபத்து: தமிழக அரசுக்கு அறிவுரை!!

        கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கப்பலிலிருந்த கச்சா எண்ணெய் கடல் முழுவதும் கலந்து மாசடைந்தது.
அதையடுத்து, எண்ணெய் அகற்றும் பணி 7வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த இரண்டு கப்பல்களையும் சிறைப்பிடிக்க வேண்டும், இந்த எண்ணெய் படிமங்களை அகற்றும் பணிகளுக்கான செலவுகளை இரண்டு கப்பல் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தேசிய மீனவர்கள் நலச் சங்கத்தின் தலைவரான எம்.இ.ராஜா உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் இந்த நடவடிக்கைக்கு கடலோர காவல் படை உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி குறித்து கடலோர காவல்படை ஐஜி எஸ்.பரமேஷ் கூறுகையில், சென்னை கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவை அகற்ற முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. கடலில் எண்ணெய் கலக்கவில்லை. எண்ணெய் கசடு மட்டுமே கலந்துள்ளது. இதுவரை 116 டன் எண்ணெய் கசடு அகற்றப்பட்டுவிட்டது. கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive