NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தரம் உயர்த்திய பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவதில்... தாமதம்!

     திருவள்ளூர் மாவட்டத்தில் தரம் உயர்த்திய பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவதில்... தாமதம்!அடிப்படை வசதி இல்லாமல் மாணவ, மாணவியர் அவதி

கடம்பத்துார்;தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, புதிய கட்டடங்கள் கட்டுவதில், கால தாமதம் ஏற்படுவதால், அடிப்படை வசதிகள் இல்லாமல், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 271 நடுநிலை, 130 உயர்நிலை, 85 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2009 - 10 முதல், 2011 - 12ம் கல்வி ஆண்டு வரை, 55 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், போதிய கட்டட வசதிகள் இல்லை. 

இது போன்று, 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரு வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே உள்ளன. இந்த கட்டடங்களின் மேல் பகுதி பழுதடைந்து, மழை காலங்களில், மழைநீர் வகுப்பறை கட்டடங்களுக்கு உள்ளே வருகிறது.மேலும், மாணவர்களுக்கு கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், மாணவ, மாணவியர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், 30 பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடம், குறுகிய, பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தரம் உயர்த்தப்பட்ட ஆண்டிலேயே, ஒரு பள்ளிக்கு, 1.60 கோடி ரூபாய் வீதம் நிதி ஒதுக்கி, ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில், புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கின.இதில், தலா ஒரு தலைமையாசிரியர் அறை, அலுவலக அறை, ஆசிரியர்கள் அறை, கணினி அறை, அறிவியல் ஆய்வகம், திறன் வளர்ப்பு கூடம், நுாலகம் மற்றும் நான்கு வகுப்பறைகள் என, 11 அறைகளுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை, எட்டு பள்ளிகளில் மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள, 42 பள்ளிகளில் பணிகள் நடக்கின்றன. எர்ணாவூர், ஆத்துார் பகுதியில், இட தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், ஓராண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்ற நிலையில் துவங்கப்பட்டும், பணிகள் நிறைவு பெறாததால், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2012 - 13ம் ஆண்டில் இருந்து, இதுவரை, எந்த பள்ளிகளும் தரம் உயர்த்தப்படாததால், அரசு பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதற்கு முக்கிய காரணமாகவும் விளங்குகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்டும் பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர் சேர்க்கை குறைவுதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பணிகளை விரைந்து முடிப்பதில்லை. உதாரணமாக, 2009 - 10ல், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, புதிய கட்டடங்கள் ஓராண்டிற்குள் கட்டி முடித்திருந்தால், அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகமாகி இருக்கும். ஆனால், ஏழு ஆண்டுகளாகியும் இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால், பள்ளியில் சேர்ந்த மாணவர்களும், பிற பள்ளிகளுக்கு சென்று விடுகின்றனர். பின், எப்படி எங்களால் அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.பெயர் வெளியிட விரும்பாத தலைமையாசிரியர்

ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்படும்தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, புதிய கட்டட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பள்ளிகளுக்கு தேவையான கரும்பலகை உட்பட, கட்டட பொருட்களை பெரும்பாலும் ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதால், பொருட்கள் வருவதில் கால தாமதம் ஏற்படுகிறது. சில பகுதிகளில், மின் இணைப்புக்கு தேவையான ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளாததாலும், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும், ஒப்பந்ததாரரிடம் புதிய கட்டடம் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும், தற்போது தரம் உயர்த்தப்பட்ட, எட்டு பள்ளிகளுக்கு மட்டும் புதிய கட்டடம் கட்டும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள, 42 பள்ளிகளில், 24 பள்ளிகளில் புதிய கட்டட பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. பணிகள் முடிவடைந்த பின், பள்ளி கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரி, திருவள்ளூர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive