NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முறைப்படுத்தப்படாத SSA, RMSA பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி

       முறைப்படுத்தப்படாத எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் பள்ளி கல்வி துறையில் உள்ள பணியிடங்கள் : சம்பள பிரச்னையால் நிதித்துறை அதிருப்தி

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் புதிதாக உருவாக்கப்பட்ட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக இப்பணியிடங்கள் முறைப்படுத்தப்படாததால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்குவதற்கு, அரசாணை நீட்டிப்பு (எக்ஸ்பிரஸ் பே ஆர்டர்) வழங்க வேண்டியுள்ளதால், நிதித்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வருவாய், கல்வி, பொதுப்பணி, மருத்துவம், கூட்டுறவு உட்பட பல்வேறு அரசு துறைகளில் தேவைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன. 


இவற்றில் மாற்றுப்பணி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு, நிதித்துறை சார்பில் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை ஒப்புதல் வழங்கிய நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒப்புதல் வழங்க நிதித்துறை உத்தரவிட்டது. இதனால் 'பே ஆர்டர்' பெற்று உரிய மாதத்தில் சம்பளம் பெற முடியாமல், 10 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து, பல்வேறு குளறுபடிகள் நீடிக்கின்றன. குறிப்பாக திட்டப் பணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாற்றுப்பணியாக நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு சம்மந்தப்பட்ட திட்ட நிதி மூலம் சம்பளம் வழங்க வேண்டும். குறிப்பாக கல்வி துறையில் 875 உருவாக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் பள்ளி கல்வி துறையில் உள்ளவர்களுக்கு, எந்த திட்டங்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என்பதில், பல்வேறு நடைமுறை குளறுபடிகள் நீடிப்பதாக, நிதித்துறை சார்பில் தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் திட்ட நிதியை மாநில அரசுக்கு ஒப்படைப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. நிதித்துறை ஒப்புதலும் விரைவில் கிடைப்பதில்லை. அதேபோல் மாற்றுப்பணி நியமிக்கப்பட்டவர்களின் பழைய பணியிடங்கள் 'சரண்டர்' செய்யப்படாமலும் இழுத்தடிக்கப்படுகின்றன, என்றார். புதிய உருவாக்கப்பட்ட பணியிடங்களை முறைப்படுத்தவும், அரசு துறைகளில் தேவை அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive