
Success bows to the hardwork.
கடின உழைப்புக்கு வெற்றி தலைவணங்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.
2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.
பொன்மொழி :
நீ மதிக்கும் மனிதனை காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் தெரிந்து கொள்வேன் - தாமஸ் கார்லைல்
பொது அறிவு :
01."குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
02.பாலை பதப்படுத்தும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
English words :
torched - burned
breach - breaking a rule
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
வால் நட்சத்திரத்துக்கு வால் உள்ளது. சூரியனுக்கு அருகிலுள்ள புதன் கோளுக்கு வால் உள்ளது. 'கதிர்வீச்சு அழுத்தம்' காரணமாக சோடியம் அணுக்கள் வெளியே தள்ளப்பட்டு அதன் வளிமண்டலத்தை அகற்றி, அதற்கு நீண்ட ஒளிரும் வால் கிடைக்கிறது. அதுபோல பூமிக்கு வால் இருக்கிறதா என்றால் ஆம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால், விண்வெளியில் 20 லட்சம் கி.மீ., துாரத்துக்கு நீண்டுள்ளது. இது பூமியின் இருண்ட பக்கத்தில் இருப்பதால் இது தெரிவதில்லை. பூமியின் காந்தப்புலத்தை சூரிய காற்று சிதைப்பதால் இந்த வால் உருவாகிறது.
டிசம்பர் 19
நீதிக்கதை
மன உறுதி
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.
ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.
அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன்.
ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது, என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டுபயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.
இன்றைய செய்திகள்

































.png)