Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லுங்கி, நைட்டி அணிந்து வர பெற்றோருக்கு தடை

        டி.என்.பாளையம், டி: கோபி அருகே அரசு பள்ளி ஒன்றில், பெற்றோர் லுங்கி, நைட்டி அணிந்து வருவதற்கு தடை விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 
 
       ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, டி.என்.பாளையம் ஒன்றியம், பங்களாப்புதுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில், 950-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், கிராமப்புறங்களை சேர்ந்த பின் தங்கிய மாணவர்கள் அதிகம். 
              மாணவர் வருகை பதிவேடு கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து, 'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர். அவ்வாறு வரும் பெற்றோரில், பல ஆண்கள் லுங்கி, அரைக்கால் டவுசரும், பெண்கள் நைட்டி அணிந்தும் வருகின்றனர். மேலும், பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்துக்கு, ஒரு சில கிராமப்புற பெற்றோர், சட்டை அணியாமல் வருகின்றனர்.
 
           இந்நிலையில், கிராமப்புற மாணவர்களோடு சேர்த்து, பெற்றோரையும் திருத்த அரசுப் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, 'பள்ளிக்கு வரும் பெற்றோர் வேஷ்டி, சட்டை, சேலை அணிந்து தான் வரவேண்டும்' என்பதை அறிவுறுத்தி, பள்ளிக்கூட நுழைவு வாயிலில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive