NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் உணவு தர சான்று பெறுவது கட்டாயம் !!

அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு, உணவு பாதுகாப்பு தரச்சான்று கட்டாயமாக பெற வேண்டும்’ என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

மேலும், சத்துணவுகளை தர சோதனைக்கு உட்படுத்தவும், மனித வள மேம்பாட்டு துறை திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,090 தொடக்கப் பள்ளிகள், 284 நடு நிலைப் பள்ளிகள், 342 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,716 பள்ளிகள் உள்ளன.
இதில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களை தவிர, பிற அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது.பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமானதாகவும்; சத்தாண உணவாக இருக்க வேண்டும் என, அரசு பல்வேறு வித நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக, தினசரி வழங்கப்படும் மதிய உணவில், வித விதமான காய்கறிகள் மற்றும் முட்டை ஆகிய புரத சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளவும் தனி பட்டியல் தயாரித்து, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.அதன் படி, பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவு மையங்களில் சத்தாண உணவு வழங்கப்படுகிறது.
மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சமைக்கப்பட்ட சத்துணவை, பரிசோதனைக்கு உட்படுத்த, மத்திய மனித வள மேம்பாட்டு துறை, மாநில அரசின் சமூக நலத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் படி, சமூக நலத்துறையில் இருந்து, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், மனித வள மேம்பாட்டு துறை அனுப்பியுள்ள இத்திட்டத்தை, சமூக நலத்துறை எந்த வகையில் செயல்படுத்த உள்ளது என்ற குழப்பம் சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே நீடிக்கிறது.
எனினும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அனைத்து அரசு சத்துணவு மையங்களுக்கும், உணவு பாதுகாப்பு தர சான்றை கட்டாயமாக பெற வேண்டும் என, சத்துணவு மையங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.இதற்கான, விண்ணப்பங்களும், அந்தந்த வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சத்துணவு மையங்களில் நேரடியாக வழங்கி வருகின்றனர்.
இதன் மூலம், அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தரம் கூட்டப்பட்ட சத்துணவு அரசு பள்ளிகளில் கிடைக்கும் என, முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
*செயல்முறை வரவில்லை!*
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அரசு பள்ளி சத்துணவு மையங்களில், உரிமம் பெற வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்கிறதா என, சோதனை செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதை எவ்வாறு செயல்படுத்த உள்ளது என்ற செயல் முறைகள் எங்களுக்கு வரவில்லை. வந்தால், அதற்குரிய பணிகள் துவங்கப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive