Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொழிற்கல்விக்கான விண்ணப்பங்கள் குவிந்தன: தர வரிசை பட்டியல் தயாரிப்பு தீவிரம்


           மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு, 6765 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

அரசு அங்கீகாரமின்றி மாணவர்கள் சேர்ப்பு: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை


         அரசு அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., எச்சரித்துள்ளார்.

இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?


             எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்


          1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., இனி வெளிநாடுகளிலும்...

               இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் சர்வதேச கிளைகளை தொடங்குவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி., ) திட்டமிட்டுள்ளது. இதன்படி முதன்முறையாக கத்தார் நாட்டில் ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் கிளைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என (எம்.எச்.ஆர்.டி., ) தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெர்ச்சன்ட் நேவி


          மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை என்பது ராணுவத்தோடு தொடர்புடையது. 

பள்ளிகள் முன் பெற்றோர் பரிதவிப்பு


          பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ததை கல்வித்துறை கடைசி நேரத்தில் அறிவித்ததால், கல்வியாண்டின் துவக்க தினமான நேற்று, பெற்றோரும், குழந்தைகளும் குழப்பம் அடைந்தனர். 

B.E Rank List 2013

TN-TET Application Issue Details | ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை


            ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்.

 

LPC Certificate

TNTET – 2013 விண்ணப்பங்கள் விற்பனை தொடர்பான தலைமை ஆசிரியர்களுக்கான குறிப்புகள்


            தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு – 2013 தேர்விற்கான விண்ணப்பங்கள் இம்முறை அனைத்து அரசு மேனிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான தகுந்த முன்னேற்பாடுகள் செய்திட தலைமை ஆசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.


1. TNTET – 2013 தேர்விற்கு தாள் 1 மற்றும் தாள் 11க்கு வெவ்வேறு விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


2. தாள் 1 மற்றும் தாள் 11க்கான விண்ணப்பங்கள் வெவ்வேறு தனித்தனி அறைகளில் விற்பனை செய்யப்பட வேண்டும்.

TN-TET Application Issue Details | ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை


         ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி: 4 புதிய திட்டங்கள் அமல்


         அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

பள்ளிகள் திறப்பு: இலவச பஸ் பாஸ் விரைவில் கிடைக்குமா?


      பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச, பஸ் பாஸ் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

மருத்துவ பல்கலை மாணவர்களுக்கு அறிவுரை


          தனியார் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்த பின்பே, மாணவர்கள், அக்கல்லூரிகளில் சேர வேண்டும் என, மருத்துவ பல்கலை அறிவுறுத்தி உள்ளது.

ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு


         பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.

உதவித் தொகை வழங்குவதை கண்காணிக்க இணையதளம்


        தமிழக கல்லூரிகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு


          மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான தர வரிசைப் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தர வரிசைப் பட்டியலில், முதல், 10 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையையும், அமைச்சர் வழங்குகிறார்.

தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை


          பள்ளிகள் திறந்த நிலையிலும், தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், கட்டணம் வசூலிப்பதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் இன்று மதியம் வெளியீடு முதல்கட்ட கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்குகிறது:


          என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல்கட்ட பொது கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்குகிறது.
 

சென்னை மாவட்ட தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி


            சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிர்வாகப் பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.
 

அரசின் பல்வேறு துறைகளில் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்


           அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.
 

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பாடப்புத்தகங்கள் வாங்க அலைமோதும் பெற்றோர் கூட்டம் பிளஸ்–1 பாடப்புத்தகம் கிடைக்காமல் அவதி


            சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை மையத்தில் இன்று பள்ளி பாடப்புத்தகங்கள் வாங்க மாணவர்களின் பெற்றோர் கூட்டம் அலைமோதியது. பிளஸ்–1 பாடப்புத்தகம் இருப்பு இல்லாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 

அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


          அரசு நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்குமாறு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

42 மழலையர் பள்ளிகளுக்குத் தடை


              காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள 42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 
 

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு


           பி.இ., ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, இன்று (12ம் தேதி) காலை வெளியிடுகிறது. வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
 

மனித உடல் ஓர் அதிசியம்


            மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.
 

கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை : அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது


            அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்விதமான கட்டணமும் வசூலிக்க கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

முதல்வரின் முயற்சியால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வு: தோப்பு வெங்கடாச்சலம்


            முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.
 

பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்க விருப்பமா?


          பிளஸ் 2 படிப்பை முடித்தப்பிறகு, உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் முக்கியமான ஒரு செயல்பாடாக கருதப்படுவதைப் போல், பத்தாம் வகுப்பை முடித்து, மேல்நிலைப் படிப்பிற்கான பிரிவைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
 

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?


         2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 

தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளியை புறக்கணிக்கும் பெற்றோர்


           ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவு தெரிவித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் புறக்கணித்தனர்.
 

பள்ளியில் சேர்க்க மறுப்பு: பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்


          சோமனூர், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 39; விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 34, இவர்களுக்கு பிரவீன் சந்தர், 8, என்ற மகனும், தீப்தி 5, என்ற மகளும் உள்ளனர். மகன், சாமளாபுரத்தில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.
 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive