கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சுதந்திர தின விழா - முறையான ஏற்பாடுகளின்றி வெயிலில் வதங்கிய மாணவர்கள்
சுதந்திர தினவிழாவில், முறையாக ஏற்பாடுகள்
செய்யாததால், பல மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவ, மாணவியர் நிற்க
வைப்பட்டனர். ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்தில், சுதந்திர தினவிழா
நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, ஒன்பது மணிக்கு கொடியேற்றப்பட்டு, அணி வகுப்பு
மரியாதை, தியாகிகள் கவுரவித்தல், அலுவலர்களுக்கு நற்சான்று, பதக்கம்
வழங்குதல் போன்றவை நடந்தன.
இணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி! - விகடன்
இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் இணைய சீண்டலுக்கு
(சைபர்புல்லிங்) எளிதான தீர்வை முன் வைத்து வியக்க வைத்துள்ளார் 14 வயதான
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அமெரிக்கமாணவி திரிஷா பிரபு. கூகுள் நிறுவனம்
சார்பில் நடத்தப்படும் அறிவியல் போட்டியில் இந்த தீர்வை முன் வைத்து அவர்
இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்.
12th Latest Chemistry Study Material Collection
12th Latest Chemistry Study Material Collection
- For Download Complete Chemistry Material - Tamil Medium / English Medium
- For Download 5 Mark Question & Answers - Tamil Medium / English Medium
TET New Weightage GO: பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிப்பு
முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர்
தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் பக்கங்கள் மாயம் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என்னுடைய மகன் பிரகாஷ்,
புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தார். கடந்த மார்ச் மாதம்
பிளஸ் 2 தேர்வு எழுதினார். 1080 மதிப்பெண்கள் பெற்றார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட
குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற
ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின்
அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு:
முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இளநிலை பொறியியல்
படிப்புகளுக்கான சேர்க்கை அண்மையில் முடிவுற்ற நிலையில், முதுநிலை
பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்.
படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இப்போது நடைபெற உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம்
அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில்
அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற சுதந்திர
தினவிழாவில், ஊராட்சித் தலைவர் காந்திமதி சேதுராமனை தேசியக் கொடி ஏற்ற,
தலைமையாசிரியர் செல்வமணி அனுமதிக்கவில்லை. இதுகுறித்து தலைவர் காந்திமதி
சேதுராமன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, புகார்
குறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிக்கு ஆட்சியர் ராஜாராமன்
உத்தரவிட்டார்.
பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேர
ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக் கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் தவிப்பு
மாநிலம் முழுவதும் 'கவுன்சிலிங்' மூலம் கூடுதல் பணியிடங்களில், பணி
ஒதுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஜூலை மாத சம்பளம் இன்னும்
கிடைக்கவில்லை.
டி.இ.டி., வெயிட்டேஜ் மதிப்பெண்; சீனியர் ஆசிரியர்கள் புலம்பல்
தேனி
: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.இ.டி.,) நடத்திய பட்டதாரி, இடைநிலை
ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கபடும் வெயிட்டேஜ்
மதிப்பெண் முறையால் சீனியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை தடுக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துகிறது
உத்தர பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி
வாரிய தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு
மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.
லக்னோவில் இன்று மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் மூத்த
அதிகாரிகளுடன் இடைநிலைக் கல்வி அமைச்சர் மெகபூப் அலி ஆலோசனை நடத்தினார்.
மாநகராட்சி பள்ளி போலி ஆசிரியர் விவகாரம் அவ்ளோ தான்! சிக்காமல் தப்பிக்க பணி மாறுதலுக்கு முயற்சி?
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது.
ஆசிரியர் மீது நடவடிக்கை: கலெக்டருக்கு அதிகாரம் : ஐகோர்ட் உத்தரவு
ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
TNTET Article - தமிழ் ஆசிரியர் நியமனம் தொடர்பாக...!!!
தமிழ் ஆசிரியர்களை ஏன் சமூக அறிவியல் தொடர்பானப் பணியில் அமர்த்தக்கூடாது?
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் ஒவ்வொரு தமிழாசிரியரும் சமூக அறிவியல் ஆசிரியருக்கு இணையாக சமூக அறிவியல் பாடத்தில் இருந்து 60 வினாக்களுக்குத் தேர்வு எழுதுகிறார்கள்.
PGTRB :வணிகவியல் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு
முதுகலை வணிகவியல் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரும்
மனுவுக்கு பதிலளிக்குமாறு, தேர்வாணைய உறுப்பினர் செயலருக்கு சென்னை உயர்
நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் பணியில் (அறிவியல் பாடங்கள்) சேருவதற்கான “நெட்” தகுதித்தேர்வை மத்திய
அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ் ஐஆர்) ஆண்டுக்கு 2 தடவை
நடத்துகிறது.