Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

        தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தில் 1,054 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு

         பேசிக் கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்க இயலாது என தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Call Drop எனப்படும் இந்தப் பிரச்னையில் என்ன செய்யலாம் என பொதுமக்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான TRAI கருத்துகேட்டிருந்தது.


அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

        சென்னை,செப்.23 (டி.என்.எஸ்) பா.ம.க ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும், என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.


5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு

         சென்னை, செப். 23–முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார்.அதில் கூறப்பட்டிருப்பதாவது:–கடந்த நான்காண்டுகளில் 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதோடு, 182 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன.


இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அரசு!

      இடஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகள் குழப்புவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, 'இட ஒதுக்கீடு கொள்கையை, மறுபரிசீலனை செய்ய தேவையில்லை; இப்போதைய முறையே தொடரும்' என, அறிவித்துள்ளது.

காவல் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள்!!!

      அனைத்துக் காவல் நிலையங்களிலும் படிப்படியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 

கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து!

        போதிய உபகரணம் இல்லாததால், கோவை மண்டலத்தில், மூன்று கல்லுாரிகளின் செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் என, 521 பாலிடெக்னிக் கல்லுாரிகள்  செயல்படுகின்றன. 
 

'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இணையதளம் நாளை துவக்கம்:

          அப்துல் கலாம் லட்சிய இந்தியா' இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை துவக்கப்படுகிறது. கலாமின், ஐந்து திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தியோருக்கு அக்., 15ம் தேதி 'அப்துல் கலாம் சேவை ரத்னா' விருது வழங்கப்படுகிறது.
 

யு.ஜி.சி., அங்கீகாரத்துடன் 88 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

        பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரத்துடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது; மொத்தம், 88 படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.
 

1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு

          தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளும், 15 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. அதேபோல, 7,307 அரசு நடுநிலை பள்ளிகளும், 2,400 அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

தரம் உயர்ந்தும் வளர்ச்சி பெறாத பள்ளிகள் கல்வித்துறை கவனிக்குமா?

       உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான கூடுதல்வகுப்பறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது. 

தகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு

        தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2010-ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், வக்கீலாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றமா? 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தி!

         பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உட்பட, பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டதாக, 'வாட்ஸ் ஆப்'பில் நேற்று பரவிய வதந்தியால், அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை உறுதிபடுத்தாமல், சில, 'டிவி' சேனல்கள் மற்றும் இணையதளங்களும் இச்செய்தியை ஒளிபரப்பின. 

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்வு!!!

     தமிழக பிரிவைச் சேர்ந்த ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு:

அரசு ஊழியர்களுககு திமுக பாதுகாப்பு அரணாக திகழும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

      ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரணாக திமுக திகழும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Shubamela Matrimony - சுப மேளா திருமண வலைதளம் - சுப ஆரம்பம்!



சுபமேளா -  சுப ஆரம்பம்!

         கடந்த இரு வருடங்களாக ஆசிரியர்களுக்கு மட்டுமான திருமண தகவல்களை பதித்து ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள உதவி புரிந்த பாடசாலை வலைதளம் தற்போது ஆசிரியர் மட்டுமல்லாமல் அனைத்து தொழில் புரிவோரும், அனைத்து சமூகத்தினரும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள உதவும் திருமண தகவல் வலைதளத்தை துவக்கியுள்ளது.

இத்திருமண தகவல் வலைதளத்தின் சிறப்புகள்


மைக்ரோசாப்ட் ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியீடு



மைக்ரோசாப்ட் ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியீடு

  ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தொழிற் பயிற்சி

         ‛‛நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும்’’ என தொழிற் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டலஇயக்குனர் தெரிவித்துள்ளார்.


கடும் எதிர்ப்பு எதிரொலி: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது


கடும் எதிர்ப்பு எதிரொலி: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது

நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது.

போதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

போதிய ஆசிரியர்களை நியமிக்ககோரி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
தஞ்சை மேம்பாலம் அருகே பார்வையற்றோர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 150 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் அடிப்படை வசதி செய்யக்கோரியும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி இன்று நடைபெற்ற தேர்வையும் மாணவர்கள் புறக்கணித்தனர். அவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

          புதுச்சேரி கல்வித் துறை பணியிட நியமனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 

பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.


        "WhatsApp" மற்றும் FACEBOOK - இல் தற்போது பள்ளிக்கல்விச் செயலாளர் மாற்றம் என்று பரவும் தகவல் தவறானது. இது 12/2013 அன்று வந்த செய்தி. பள்ளிக்கல்விச்செயலர் மாற்றம் என இதுவரை அரசின் சார்பில் அமிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் மீடியாக்களில் வெளியிடப்படவில்லை. 
 

வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற புதிய கொள்கைக்கு எதிர்ப்பு: வாபஸ் பெற்றது மத்திய அரசு

           வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்த மாதம் 16ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.


TNPSC:சுற்றுலா படிப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை: 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் - விரைவில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

              தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளி யிடுகிறது.


PG Asst Probation Model Proposal

Thanks to Mr. K.MANIVANNAN

12th Study Materials - Accounts & Commerce

New Materials:
Thanks to Mr. R. SARAVANAN, M,COM,.BA

Missed the deadline for filing tax returns? Here's what to do

Filing your tax return has become very simple now but a lot of taxpayers still manage to miss the deadline. This year, the last date was extended twice. If you are among the lazy taxpayers who missed the 7 September deadline, there is no need to panic. You can still file your tax return by 31 March 2016.

ஆதார் பதிவுக்கு இனி "நோ டென்ஷன்':மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்

        டிசம்பருக்குள் முடிக்க ஏதுவாக, ஆதார் பதிவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன; முதற்கட்டமாக, விடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஆதார் சிறப்பு முகாம், திருப்பூரில் இன்று துவங்குகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive