Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நானும் ஓர் சதாவதானி



நாள்தோறும் நான் பூசனை செய்யும் கோவில் பள்ளிக்கூடம்
கோவிலைச் சுற்றிவரும் பக்தர்கள் பசங்க

PHd Scholorship அதிகரிப்பு

            ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்டி.) கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 1 படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவிகளுக்கு உதவித்தொகை

     சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று தற்போது சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு சி.பி.எஸ்.இ., மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. 

3 கோரிக்கை ஏற்பு; 12க்கு கைவிரிப்பு

             ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: நிதி சார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, நிதித்துறைச் செயலருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளுக்கு கூடுதல் நிதி தேவை என்பதால், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என நிதித்துறை தெரிவித்துள்ளது.
 

துணிந்தால் துணிப்பையும் துணையாகும்: ஆசிரியையின் தூய்மை பணி

''அன்னை நம் பூமியை மாசாக மாற்றினோம், தாயான உன்னைத் தான் தரிசாக மாற்றினோம்'' கு.நாட்டாப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் பாடும் பாட்டு தான் இது. சுற்றுச் சூழலை பாதுாக்கும் பணியில் ஈடுபடும் மாணவர்கள், பூமித் தாயின் மேல் பாசம் கொண்டு எழுதிய பாடல் வரிகள் தான் இவை.

'நெட்' தேர்வு விடைத்தாள் நகல் நவ., 10 வரை விண்ணப்பிக்கலாம்

           நெட் - நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' என்ற தேசிய திறனாய்வு தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்களுக்கு வழங்க, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. 

ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு அறிவிப்பு

             நகர் மற்றும் ஊரமைப்பு துறை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு, டிசம்பர், 13ம் தேதி தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர், 13ம் தேதி, காலையிலும் மதியமும், இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, நவ., 4ம் தேதி வரை, 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
 

IGNOU BEd Entrance Exam 2015 Answer Key

http://www.trbtnpsc.com/2015/10/ignou-bed-entrance-exam-2015-answer-key.html

IGNOU BEd Entrance Exam 2015 Answer Key (Updated)

Thanks to Mr. RAVISANKAR SWAMINATHAN, Chennai.

பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்

        சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நேற்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


ஆசிரியர்கள் நாளை 'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு

      அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி; திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு

      "ஜாக்டோ" அமைப்புடன் இன்று மாலை 4 மணிக்கு இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.


அதிகமான நோபல் பரிசு பிரிட்டனில் படித்தவர்களுக்கே!

     நோபல் பரிசு பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், பிரிட்டனில் உயர்கல்வி படித்தவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

கருவூல இயக்குனரை மாற்றக்கோரி ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு

           கருவூலத்துறை இயக்குனரை மாற்றக்கோரி, தமிழகம் முழுவதும், கருவூல கணக்குத்துறை அலுவலர்கள், 3,000 பேர், நேற்று, ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
 

ஆதார் அட்டை கட்டாயம் ஆகுமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

            நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் “ஆதார்” என்ற பெயரில் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் சமையல் கியாஸ் இணைப்பு, வங்கி கணக்கு தொடங்குதல், ஓய்வூதியம், திருமணங்களை பதிவு செய்தல், சேமநல நிதி போன்ற சில பொதுச்சேவைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கின. 

வி.ஐ.டி., மாணவர் கின்னஸ் சாதனை

           கோட்டா: பை எனப்படும், 70,000 கணித மதிப்பு எண்களை, நினைவுபடுத்திக் கூறிய, வேலுார், வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரின் பெயர், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 

பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி என்ன?

        பாலிடெக்னிக்  கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது.இதில் கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர். 

ஆசிரியைகள் இனி 'கோட்' அணிய வேண்டும் - சோதனை முறையில் அமலுக்கு வந்தது

            சமூக விரோதிகள் மற்றும் குறும்புத்தனமான மாணவர்களின் கேலி, கிண்டல்களில் இருந்து தப்பிக்கும் வகையில், அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு, மேலங்கி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பருவ வயதை எட்டும் மாணவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள், சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. மேலும், 18 வயது பூர்த்தி அடையாத, பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியைகளை கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்களாலும், கல்வித் துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ஆசிரியர்களின் கைகளில்அரசு பள்ளிகளின் தரம் - தொடக்கக் கல்வி இணை இயக்குனர் பேச்சு

       'அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது; அவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் தான் மாணவர் கற்றல் திறனின் இலக்கை எளிதில் அடைய முடியும்,'' என, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.

மாணவர் வாசிப்பு திறன் அதிகரிப்பு : இணை இயக்குனர் பெருமிதம்

        "தமிழகத்தில் தொடக்கக் கல்வி மாணவர்கள் வாசிப்பு திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது," என, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார். மதுரையில்  நிருபரிடம் அவர் கூறியதாவது: 

பொதுத் தேர்வை பல முயற்சிகளில் எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்க அரசாணை வெளியீடு

        பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் டி.சபிதா வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:

அங்கன்வாடி ஊழியர்கள் 400 பேருக்கு நர்ஸ் பணி

            தமிழகத்தில் அங்கன்வாடிகளில், பிளஸ் 2 முடித்து பணியாற்றுவோர், பொது சுகாதாரத்துறையில், நர்ஸ்களாக பணி அமர்த்தப்படுகின்றனர். ஏற்கனவே, 200 பேர் பயிற்சி முடித்து, அரசுப்பணியில் சேர்ந்து விட்டனர்; 500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா மீண்டும் விண்ணப்பிக்க வேண்டுகோள்

          ''வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சந்தீப் சக்சேனா தெரிவித்தார். தமிழகத்தில், கடந்த மாதம், 15ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கு முன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஏராளமானோர் நேரடியாகவும், 'ஆன் - லைன்' மூலமாகவும் விண்ணப்பித்திருந்தனர்.

10ம் வகுப்பு தேர்வு செய்முறைபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

           'அடுத்த ஆண்டு மார்ச்சில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சியில் சேர, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பாடங்களையும் எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள் மற்றும், 2012க்கு முந்தைய பாடத்திட்டத்தில், அறிவியல் தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மீண்டும் தேர்வு எழுத, அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.

ரேஷனில் பருப்பு தட்டுப்பாடா? கலெக்டருக்கு உடனே தெரிவிக்கலாம்!

          ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை, தேவைக்கு குறைவாக வழங்கினால், அந்த விவரத்தை கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா, 30 ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

மாணவர்களை பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

            தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்தக்கூடாது எனவும், மீறும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குட்டையில் மூழ்கி மாணவன் பலி: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

          பள்ளி நேரத்தில் வெளியே சென்ற மாணவன், குட்டையில் மூழ்கி பலியானான். 'பள்ளி நேரத்தில், மாணவன் வெளியே சென்றது எப்படி?' எனக் கேட்டு, தலைமை ஆசிரியருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. 

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி"

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் படித்தல் எழுதுதல் திறன் வளர்த்தல் பயிற்சி" என்ற தலைப்பில் 15/10/2015 மற்றும் 16/10/2015 ஆகிய நாட்களில் பயிற்சி - செயல்முறைகள்

10th Study Material - Tamil Important Questions

Prepared by Mr. B. Panneer Selvam, B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA)

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive