Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருவூல இயக்குனரை மாற்றக்கோரி ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு

           கருவூலத்துறை இயக்குனரை மாற்றக்கோரி, தமிழகம் முழுவதும், கருவூல கணக்குத்துறை அலுவலர்கள், 3,000 பேர், நேற்று, ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
 
           சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில்  உள்ள கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில், ஒரு வாரத்திற்கு முன், மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், இயக்குனர் முனியநாதன், அதிகாரிகளை சரமாரியாக திட்டியதாக கூறப்படுகிறது. 'டார்ச்சர்' தாங்க முடியாத, மதுரை மாவட்ட கூடுதல் கருவூல அதிகாரி மூர்த்தி, 57, மாரடைப்பால், கூட்டத்திலேயே மரணம் அடைந்தார். இது, அலுவலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இயக்குனரை மாற்றக்கோரி, 3,000 ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து, நேற்று போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலர் சிலுப்பன் கூறியதாவது:இயக்குனர் முனியநாதனை, 'சஸ்பெண்ட்' செய்து, அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்; துறையில் இருந்து மாற்ற வேண்டும். இறந்த மூர்த்தி குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம்; கருணை அடிப்படை வேலையை உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


ரூ.100 கோடி பாதிப்பு
* நேற்றைய போராட்டத்தால், தமிழகத்தில், 225 சார் நிலை கருவூலங்கள், 32 மாவட்ட கருவூலங்கள், ஆறு மண்டல இணை இயக்குனர் அலுவலகங்கள், ஆறு சம்பள கணக்கு அலுவலகங்கள் மற்றும் சென்னை ஓய்வூதியர் அலுவலக பணிகள் முடங்கின
* முத்திரைத்தாள் விற்பனை, 100 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டது
* அரசு துறைகளுக்கு பணம் அனுப்பும் பணிகளும் முடங்கின
* ஓய்வூதியர்கள் நேரடியாக சென்று பணம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive