Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வுத்தாள் திருத்துவோர் விவரம் தர தடை

           தேர்வுத் தாள் திருத்துவோரின் விவரங்களை, தகவல் உரிமைசட்டத்தின் கீழ் பிறருக்கு தெரிவிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

டி.இ.ஓ., காலிப்பணியிடம் கல்வித்துறை நடவடிக்கை

           தமிழக பள்ளி கல்வித்துறையிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலியிடங்களை நிரப்ப, 2008க்குள் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது. அரசு உயர் நிலை, தொடக்கக் கல்வித்துறையில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. 

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்

      "இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையே வேண்டும்", "CPS ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" பேச்சுவார்த்தையில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்

பெண்கள் தற்காப்புக்கு 'ஷாக்கிங் கிளவுஸ்'ராஜஸ்தான் பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு

      ராஜஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், பெண்களுக்கான தற்காப்பு கருவியை கண்டுபிடித்துள்ளார். பெண்களிடம் யாராவது அத்துமீறலில் ஈடுபட்டால், அந்த நபர் மீது, அதிக அழுத்தத்தில் மின்சாரம் பாயும் வகையில், கையுறையை அந்த மாணவர் தயாரித்துள்ளார்.

85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல்சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஸ்டிரைக்

           தமிழக அரசினை கண்டித்து சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடஉள்ளனர். சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் 2 நாட்கள் மூடப்படுவதால் மையங்களில் உணவு சாப்பிடும் 85 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 

அரசு ஐடிஐயில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

         அரசு ஐடிஐயில் காலியாகவுள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
 

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதேர்வுக்கு முன்பு ஜாதி, இருப்பிட சான்று

           ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு தேர்வு துவங்க உள்ளநிலையில், இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்ததும், உயர்கல்விக்காக வேறு பள்ளியில் சேர வேண்டியநிலை உள்ளது.


பிப்ரவரி 01 ம் தேதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஊதியம் பிடிக்கப்படுவதில்லை-இயக்குநர்

ஜாக்டோவின் இன்றைய பேச்சுவார்த்தையில் இயக்குனர் அளித்த தகவல்..

தமிழக சட்டப்பேரவைக்கு மே 14ம் தேதி தேர்தல்? தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே 14ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

JACTTO : முதல்வரிடம் பேசி விரைவில் தீர்வு - நிதி அமைச்சர் திரு.பன்னீர்செல்வம் உறுதி

         இன்று நடைபெற்ற ஆசரியர் இயகங்களுடானான பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களும் ஒவ்வொரு கோரிக்கைகள் குறித்து பேசின.

ஜாக்டோ அரசுடன் செய்த பேச்சுவார்த்தையும்.. ஜாக்டோவின் இறுதி முடிவும்..

பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஜாக்டோவின் கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்துவதாகவும், பட்ஜெட்டில் பரிசீலிக்க வாய்புள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல்.

JACTTO Photos

JACTTO : ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தைதற்போது நடை பெற்று வருகிறது

ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனானபேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது

ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது. 

ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் வீதம்மொத்தம் 21 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றுள்ளனர்.

Flash News:

      ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 21 பேர் தலைமைசெயலகம் 6 வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் காத்திருப்பு. சரியாக 4.30 க்கு தலைமைசெயலர் அறையில் பேச்சு துவங்கும் என எதிர்பார்ப்பு. ஜாக்டோ வுதன் ஜாக்டா ,ஜக்கோட்டா அமைப்பும் ஒரே அறையில் காத்திருப்பு


ஜாக்டோ செய்தி: 9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஜாக்டோ செய்தி:
9/2/16 அவசர கூட்ட முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன.

10/02/2016 முதல் சத்துணவு பணியாளர்கள் வேலைநிறுத்தம்

     பள்ளிக்கல்வி - 10/02/2016 முதல் சத்துணவு பணியாளர்கள் வேலைநிறுத்தம் - பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் - இயக்குனர் செயல்முறைகள் 

NPR Work Regarding

     தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) பள்ளி வேலை நேரத்தில் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. 

AEEO Panel Regarding Proceeding

        தொடக்க கல்வி - உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை தயாரித்து அனுப்ப கோருதல்-இயக்குநர் செயல்முறைகள்.. 

PET - TRB Study Material

வெற்றி.. வெற்றி..ஜாக்டோவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி...

       ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றிய விளக்கங்களை நமது ஜாக்டோ உயர்மட்டத் தலைவர்கள் தெளிவாக அனைத்தையும் கூறியதை கல்வித்துறை செயலரும், நிதித்துறை செயலரும், அமைச்சர்களும் பொருமையாக கூர்ந்து கேட்டு அறிந்தனர்..
இந்தக் கூட்டம் 3 மணிநேரம் நடைபெற்றது..

AEEO பதவிக்கு முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை தயாரித்து அனுப்ப கோருதல் சார்பு.

         தொடக்கக்கல்வி செயல்முறைகள்-சார்நிலைப்பணி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு 31.12.2009 முடிய 5 தேர்வுகளிலும் தேர்ச்சிப்பெற்று முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை மாவட்ட அளவில் தயாரித்து அனுப்ப கோருதல் சார்பு.

FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு

      FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை


ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

             ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா? அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது. "இதுவே தமிழின் சிறப்பு." அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.
 

இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு

       இருவிதமான விலையில் இணைய சேவை வழங்குவதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) மறுப்பு தெரிவித்துள்ளது.இணையச் சேவை அளிக்கும் நிறுவனங்களும், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு இணையதளத்தைப் பயன்படுத்தவும்  வெவ்வேறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என வலியுறுத்தி வந்தனர்.


விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்களுக்கு கல்விசாரா பணி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

        மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண் இணைக்கும் பணி உள்ளிட்ட கல்விசாரா பணிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

        தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், நேற்று உண்ணாவிரதம் நடந்தது.
 

10ம் வகுப்பு தனித்தேர்வு- ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

        10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்லைனில் பிப். 11, 12ல் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மார்ச் 15ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive