அதிக வருமானம் உள்ள ஊராட்சிகளில் வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்க வகை
செய்யும் அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊராட்சி
நிர்வா கத்தில் இருந்தே அவர்களுக்கு ஊதியம் வழங்கத் தேவையில்லை என்றும்
உத்தரவிட்டது.
கோவை மாவட்ட கிராம பஞ் சாயத்து நலச்சங்க தலைவர் பி.ஆர்.ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆணையில், ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அந்தந்த ஊராட்சிகளில் உள்ள உதவியாளர்களைக் கொண்டு 120 வளர்ச்சி அதிகாரிகள் உருவாக் கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊராட்சி பொது நிதியில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இது ஊராட்சிதலைவர்களின் உரிமை, அதிகாரத்தைப் பறிப்பதாகும். சட்டத்துக்கு முரணான இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘வளர்ச்சி அதிகாரிகளுக்குஊராட்சி பொது நிதியில் இருந்து ஊதியம் வழங்கத் தேவையில்லை. அதே நேரம், அந்த அதிகாரிகளை அரசு நியமிப்பதை தடுக்க முடியாது’’ என்று உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...