NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12 தொகுதி : இடைத் தேர்தல் வருமா?

           தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சனிக்கிழமை அன்று சட்டமன்றத்தில் தன் அரசின்மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார்.  
               இதற்கு 122 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெற வைத்தார்கள். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி கொறடா

ராஜேந்திரனின் உத்தரவை மீறி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார்கள். அதேபோல், அதிமுக எம்.எல்.ஏ., அருண்குமார் கொறடாவின் உத்தரவை மீறி தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் தொகுதிக்கு திரும்பிவிட்டார். இந்த 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது கட்சி கொறடா நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன் உட்பட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவருமே அவையில் பங்கேற்க வேண்டும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். ஒரு எம்.எல்.ஏ., கொறடா உத்தரவை மீறினால் அதுபற்றி பேரவைத் தலைவருக்கு பரிந்துரைத்து, சம்பந்தப்பட்ட நபரை தகுதி நீக்கம் செய்யலாம். அதன்படி, தற்போது அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள், அவையில் பங்கேற்காதவர் என 12 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கே.பாண்டியராஜன் ஆகியோரை கட்சியைவிட்டு நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஏற்கனவே அறிவித்துள்ளார். மற்றவர்களை நீக்கவில்லை. அதே நேரத்தில் பொதுச் செயலாளராக சசிகலா பதவி வகிப்பதே செல்லாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக பதிலளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் ஓ.பி.எஸ்., பாண்டியராஜனை கட்சியிலிருந்து நீக்கியது செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அந்த உத்தரவு செல்லுமானால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பேரவையில் எக்கட்சியும் சாராதவர்களாக செயல்படுவார்கள். அத னால், அவர்கள் மீது அதிமுக கொறடா நடவடிக்கை எடுக்க முடியாது.

மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எந்த கொறடா என்பதிலும் சிக்கல் உள்ளது. எடப்பாடி தரப்பில், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட எஸ்.ராஜேந்திரன் கொறடாவாக உள்ளார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு 11 எம்.எல்.ஏ.,க்களுக்கும் கொறடாவாக செம்மலையை நியமித்து அதற்கான கடிதமும் பேரவைத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை கொறடா என பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கொறடா ராஜேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். முதல்வர் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளார்கள். கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 15 நாட்களுக்குள் பேரவைத் தலைவருக்கு கொறடா பரிந்துரைக்க வேண்டும். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம் கேட்டு, அதன்பேரில் அவர் நடவடிக்கை எடுப்பார். மேலும் கட்சிக் கொறடா நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் மேற்கண்ட 12 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதும்பட்சத்தில், பொதுச் செயலாளரின் பரிந்துரையின்பேரில் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தவிர்க்கப்படும்.

அதேநேரம் தற்போதுள்ள சூழலில் எம்.எல்.ஏ.,க்களை பதவியிலிருந்து நீக்கினால், அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள். தேர்தல் ஆணையத்தில் அதிமுக தொடர்பான மனுக்கள் நிலுவையில் உள்ளதால், சட்டப்படி இதையும் அதிமுக எதிர்கொள்ள வேண்டும். அந்த 12 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். தற்போதுள்ள சூழலில் தேர்தலை எதிர்கொண்டால் எதிர்க் கட்சிகளுக்கு சாதகமாகிவிடுமோ என்ற கருத்து நிலவுவதால் அதற்கும் அதிமுக தயாராக இல்லை. எனவே, 12 எம்.எல்.ஏ.,க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றே தெரிய வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive