NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரலாற்றில் இன்று 16.10.2018

அக்டோபர் 16 (October 16) கிரிகோரியன்
ஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன.
• 690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார்.
• 1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார்.
• 1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார்.
• 1793 – பிரெஞ்சுப் புரட்சியின் உச்சக் கட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மரீ அன்டோனெட் தலை துண்டிக்கப்பட்டுமரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
• 1793 – வாட்டிக்னீசு போரில் பிரான்சு வெற்றி பெற்றது.
• 1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
• 1813 – ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.
• 1834 – லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
• 1846 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் ஈதர் மயக்க மருந்தை முதற்தடவையாக மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்
• 1905 – உருசிய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
• 1905 – பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.
• 1916 – மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதலாவது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனையை நியூயார்க் புரூக்ளினில் ஆரம்பித்தார்.
• 1923 – வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
• 1934 – குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.
• 1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான செருமனிய வான்படையின் முதலாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
• 1942 – பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
• 1946 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
• 1949 – கிரேக்கக் கம்யூனிசத் தலைவர் நிக்கலாசு சக்காரியாடிசு தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
• 1951 – பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
• 1964 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் பிரதமராகவும் பதவியேற்றனர்.
• 1964 – சீனா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
• 1968 – யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது சப்பானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
• 1973 – என்றி கிசிஞ்சர், வியட்நாம் கயூனிஸ்டுக் கட்சித் தலைவர் லே டூக் தோ ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
• 1975 – ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐவர் போர்த்துக்கீசத் திமோரில் இந்தோனேசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
• 1975 – பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள்.
• 1978 – கரோல் வொச்தீலா இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• 1984 – தென்னாபிரிக்காவின் டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்...




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive