NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுப் பணியில் ஆசிரியர்கள்: வகுப்பு புறக்கணிக்கும் மாணவர்கள்



கம்பம்: சுருளிப்பட்டி அரசு கள்ளர் பள்ளியில், ஆசிரியர்கள் மாற்றுப் பணிக்கு செல்வதை ரத்து செய்ய வலியுறுத்தி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். மாணவர்களின் பெற்றோர், மாற்றுச் சான்றிதழ் கேட்டு பள்ளியை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டத்தில், கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், 68 ஆரம்பப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், தேவாரம், எழுவம்பட்டி, கன்னியம்பட்டி, அப்பிபட்டி, சுக்காங்கல்பட்டி, ஆனைமலையன்பட்டி, ஊத்துப்பட்டி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பள்ளிகளில், 30 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பள்ளிகளுக்கு, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல பள்ளிகளில் இருந்து, ஆசிரியர்களை மாற்றுப் பணிக்கு அனுப்புகின்றனர். மாற்றுப் பணிக்கு செல்லும் ஆசிரியர், ஒரு வாரத்திற்கு அந்த பணியில் இருப்பார். அதே சமயம் அவர், நிரந்தரமாக பணியில் இருக்கும் பள்ளியில், மாணவர்களுக்கு பாடம் நடத்தப் படுவதில்லை.
இந்நிலையில், சுருளிப்பட்டி ஆரம்பப் பள்ளி மாணவர்கள், 120 பேர், நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். வகுப்பில் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாதது கண்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் டி.சி.,யை தரும்படி கேட்டு முற்றுகையிட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன், முகமது இப்ராகீம் ஆகியோர், பெற்றோர்களை சமாதானம் செய்தும், அவர்கள் ஏற்கவில்லை. ஆசிரியர்களை மாற்றுப் பணிக்கு அனுப்ப மாட்டோம் என்ற உத்தரவை, இணை இயக்குனரிடம் இருந்து பெற்று தருகிறேன் என எழுதி கையெழுத்திட்டு, கம்பம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாண்டுரங்கன், பெற்றோரிடம் உறுதி மொழி கொடுத்தார்.
அதன் பிறகே பெற்றோர், முற்றுகையை கைவிட்டனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரேமா கூறுகையில், நாங்கள் பலமுறை கூறியும் கேட்கவில்லை. டி.சி.,யை தாருங்கள் என்று கேட்டதற்கு, மாற்றுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த உத்தரவு வந்தவுடன் தருகிறோம் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் அந்த உத்தரவை எங்களிடம் காண்பித்த பிறகு, நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என்றார்.
தலைமையாசிரியை மேகலா கூறுகையில், பள்ளியில், 120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக, எங்கள் இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாற்றுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் கவலைப்பட வேண்டாம். வழக்கம் போல் பள்ளி செயல்படும் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive