NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மறதி நோயால் மாணவர்கள் பாதிப்பு கூடுதல் நேரம் ஒதுக்கி உத்தரவு

         தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

        தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 9ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 69 மையங்களில், 27 ஆயிரத்து, 606 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், ஆறு இடங்களில், பத்து வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 20 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
           மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதிட, 26 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது:

                   தர்மபுரி மாவட்டத்தில் பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவ, மாணவிகளில், தேர்வுக்கு முன்னதாகவே, டிஸ்லெக்சியா எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்னர். அவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது, என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive