NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

        சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
         கரூர் மாவட்ட உள்ளாட்சித்துறை பொறியியல் பிரிவில் 14 சாலை ஆய்வாளர் பதவிகள் காலியாகஉள்ளன. இந்த பணிக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஐடிஐ சிவில் டிராப்ட்மேன்சிப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த விதவை பெண்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) மற்றும் மற்ற பிரிவினர் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த இடங்களுக்கு இனசுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.தகுதியுள்ளவர்கள் வரும் 31-ம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சிப்பிரிவு), அறை எண் 203, மாவட்ட ஆட்சியரகம், கரூர்-639 007என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தனி விண்ணப்ப படிவம் இல்லை. வெள்ளைத்தாளில் எழுதி அனுப்ப வேண்டும். கல்வித்தகுதிக்கான சான்றிதழ் நகலை சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive