சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28)
வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை
நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் எழுதினர். சென்னை மண்டலத்தில் 1.7 லட்சம் பேர் இந்தத் தேர்வை
எழுதியுள்ளனர். முன்னதாக, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
திங்கள்கிழமை (மே 25) வெளியிடப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...