NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிநாட்டு நிதியுதவி பெற 20,000 என்ஜிஓ-க்களுக்குத் தடை!!!

            வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற,
20,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
விதிகளை மீறி அந்த நிறுவனங்கள் செயல்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஜிஓ-க்கள் செயல்பட்டு வந்தன. அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக வழங்கப்படுவதாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சம்பந்தப்பட்ட என்ஜிஓ அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டன. இதற்காக வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம் (எஃப்சிஆர்ஏ) அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், அந்த விதிகளை மீறி தன்னிச்சையாக பெரும்பாலான என்ஜிஓ-க்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.
அதன் முடிவில், 20,000 என்ஜிஓ-க்கள் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்காக அவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது. தில்லியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இதுகுறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 13,000 என்ஜிஓ-க்களுக்கு மட்டுமே வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்கான உரிமம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர் வெளிநாட்டு நிதியுதவி பெற 20,000 என்ஜிஓ-க்களுக்குத் தடை!!!
வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற, 20,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
விதிகளை மீறி அந்த நிறுவனங்கள் செயல்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஜிஓ-க்கள் செயல்பட்டு வந்தன. அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக வழங்கப்படுவதாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சம்பந்தப்பட்ட என்ஜிஓ அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டன. இதற்காக வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம் (எஃப்சிஆர்ஏ) அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், அந்த விதிகளை மீறி தன்னிச்சையாக பெரும்பாலான என்ஜிஓ-க்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.
அதன் முடிவில், 20,000 என்ஜிஓ-க்கள் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்காக அவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது. தில்லியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இதுகுறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 13,000 என்ஜிஓ-க்களுக்கு மட்டுமே வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்கான உரிமம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive