NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு இயந்திரம் முடங்கியது...!!

தமிழகம் முழுவதும் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனார் அரசு பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்குபின் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18,300 கோடி. இந்த தொகையை
மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இதை கண்டித்து ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 5-ந்தேதி 60 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனை தொடர்ந்து  12லட்சம் பேர் பங்கேற்ற ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும் நடத்தப்பட்டது.. இந்த நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை .

 எனவே  இன்று செப்டம்பர் 7 முதல்  தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை  நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிகள்,  அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை இல்லாததால் வகுப்புகளும் செயல்படவில்லை. சென்னயில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் சேப்பாக்கம்  சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகமெங்கும் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் லட்சக் கணக்கில் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்...

போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகளுடன் , போராட்ட களத்திலிருந்து..




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive