NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இணைய விமர்சனம் : கைதும் உத்தரவும்!!!

சமூக வலைதளங்களில் நீதித்துறையை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இதுகுறித்து ஏற்கனவே பெருங்களத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று,தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதத்திலிருந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்துக்கு இடையில் நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு
வந்தபோது, பள்ளிகளின் கல்வித்தரம் தொடர்பான நீதிபதி கிருபாகரன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதிலும் குறிப்பாக தங்களுடைய பணியை மட்டும் ஒழுங்காக செய்யாத ஆசிரியர்கள், கோரிக்கைகளுக்காக மட்டும் போராட்டம் நடத்துவது ஏன் என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நீதிமன்றத்தை, நீதிபதியை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் செந்தில்குமார்,சங்கரன், சூர்யபிரகாஷ் தொடர்ந்த வழக்கு கடந்த 15ஆம் தேதி நீதிபதி கிருபாகரன்முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது,"ஆசிரியர் போராட்டங்கள் குறித்து நீதிமன்றத்தின் கேள்விகளுக்கும், உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் மனு தாக்கல் செய்ய வேண்டும்"என்று மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று ( செப்டம்பர் 22) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,நீதிபதி கிருபாகரன்," இதுபோன்று சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவர்கள் தங்களுக்கு தெரிந்தே அவதூறு பரப்புவது கிடையாது. எனவே இவர்களை யார் இயக்குகிறார்கள் என்று கண்டறிய வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதிமன்றத்தையும், நீதிபதியையும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ளார்.விசாரணையும் இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த எதிர்க்கட்சிகள்,அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த சட்டமன்றத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை. போராட்டத்தின்போது பள்ளிக்கு வந்த மாணவர்களை திருப்பி அனுப்பிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு," சமூக வலைதளங்களில் நீதித்துறையை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுவரை சமூக வலைதளத்தில் நீதிமன்றம் குறித்து அவதூறு பரப்பிய பெருங்களத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுபாஷ் சந்திரபோஸும், பாளையங்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவர்கள் யார், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive