NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2019-2020 ஆம் கல்வியாண்டு, மார்ச்2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ள நடத்தப்பெறும் செய்முறை பயிற்சி வகுப்பு பதிவிற்கான விண்ணப்பம்.

SSLC EXAMINATION - MARCH 2020 - SCIENCE PRACTICAL ENROLMENT - PRESS RELEASE
- அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006 2019-2020 ஆம் கல்வி ஆண்டு, மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு 2019-2020 ஆம் கல்வி ஆண்டு, மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில்சேர பெயர்களை பதிவு செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
 அனைத்து தனித் தேர்வர்களும் 06.06.2019 (வியாழக்கிழமை) முதல் 29.06.2019 (சனிக்கிழமை) -க்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.
பயிற்சி வகுப்புகளுக்கு 80ரூ வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். செய்முறைப் பயிற்சி பெற்ற தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரம் அறிந்து செய்முறைத் தேர்வினை தவறாமல் எழுதிட வேண்டும்.
செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வரின் விண்ணப்பம் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge .tn.gov.in என்ற இணையதளத்தில் 06.06.2019 முதல் 29.06.2019 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 29.06.2019 க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive