அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலையில் பள்ளி துவங்கும் முன், இறைவணக்கம் செலுத்துவார்கள். மழை காலங்களாக இருந்தாலும், மாணவர்கள் வரிசையில் நின்று தமிழ்த்தாய் வாழ்த்து, இறைவணக்கம் செலுத்துவது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கல்வி முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தினமும் பள்ளி தொடங்குவதற்கு முன், அப்பள்ளியின் வளாகத்தில் இறைவணக்கம் செலுத்துவது வழக்கம். இனி வரும் காலங்களில் திங்கட் கிழமைகளில் மட்டும், பள்ளி வளாகத்தில் இறைவணக்கம் செலுத்த வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் திங்கள், வெள்ளி தவிர மற்ற நாட்களில் வெளியே இறை வணக்க கூட்டம் நடத்த வேண்டாம். அந்தந்த வகுப்பறையில் நடத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...