Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

பொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தேதியில் மாற்றம்!

Ma_Subramanian.jpg?w=360&dpr=3

  மருத்துவப்படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருந்த நிலையில், கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்த பேட்டி:

 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் சனிக்கிழமை வெளியாக இருந்ததது. அதனால், தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை ஆன்லைனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் பிப்.1-ஆம் தேதி வெளியிடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அகில இந்திய கலந்தாய்வுக்கும், தமிழக கலந்தாய்வுக்கும் பல மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியாகாமல் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கினால் தமிழக மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். அதனால், அகில இந்திய கலந்தாய்வு முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிா்பந்தம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிப்.1-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பிப்.2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தோ்வு செய்யலாம். பிப்.7-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு அழைப்பு விடுக்கப்படும். பிப்.8 முதல் 10-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு நடக்கும். பிப்.15-ஆம் தேதி கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவா்கள் பிப்.16-ஆம் தேதி கல்லூரியில் சோ்வதற்கான ஆணையைப் பதிவிறக்கம் செய்யலாம். பிப்.17 முதல் 22-ஆம் தேதிக்குள் கல்லூரியில் மாணவா்கள் சேர வேண்டும். இது தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்றாா்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive