இறைமாட்சியின்
மெய்யுணர்ந்து
பொறையுடைத்த,
புகழ்
பெருமை !
கொல்லாமை,
கொடுங்கோண்மை
தீவினை அச்சமென
தெரிந்து தெளிந்து !
சொல்வன்மையால்
அவா அறுத்து!
அடக்கம்
அவையறி
அருளுடை
இனியவை கூறும்,
இல்வாழ்வின்
சான்றாண்மையே!
நடுவு நிலைமையில்
நட்பு ஆராய்ந்து,
நலம் புணைய!
செய்ந்நன்றியறிந்து
செங்கோண்மைக
கண்ணோட்டத்தில்!
மனனர் சேர்ந்தொழுகும்
மக்கட் பேறே! - நின்
ஒப்புறவு அறிகிறேன்!
வான் சிறப்பான, - நின்
உழவின்
புகழினை
காலம் அறிந்து!
காதற் சிறப்பில்
விருந்து ஓம்பி!
மானம்
அவையறிந்து - நின்
ஊடலில் உவகையே
ஈகை!
தவத்தின்
வலி அறிந்து,
நெஞ்சோடு கிளைத்து,
பழைமை
நல்குரவும்
நாடு! - தமிழ்.
குறிப்பறிந்து
நலம் புணைந்துரைக்கிறேன்!
பண்புடை பூண்டு,
கல்வி
கேள்விகளில்
கனவு நிலை உரைக்கும்
மருந்தாம்-தமிழை!
மாதானுபங்கியின்
வாயுரையும்,
தாய் மொழி தின வாழ்த்துகளுடன்,
அறன் வலியுறுத்தி மகிழ்கிறேன்!
-
ஆ.சந்துரு -
பட்டதாரி ஆசிரியர்.
கதிரிமில்ஸ் மே.நி.பள்ளி
கோவை - 16.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...