இயல் : அரசியல்
அதிகாரம்:49.காலம் அறிதல்
குறள் எண்:486
குறள்:
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
பொருள்:
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
An old man's sayings are seldom untrue.
மூத்தோர் சொல் பொய்ப்பது அரிது.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
2. எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் படமாட்டேன்.
பொன்மொழி :
“திறமையைத் தேடு, பயிற்சி செய், பகிர்ந்து கொள்; உலகம் உன் திறனை அறியும்.”
Thought for the Day :
“Learn, practise, improve, and let your skills speak for you.”
பொது அறிவு :
1. தென்னிந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படுவது எது?
ஆலப்புழா.
2.தென்னிந்தியாவின் நயகரா என்றழைக்கப்படுவது எது?
ஒகேனக்கல்.
English words :
1. Diplomatic – Handles sensitive matters tactfully, சாதுரியமாக கையாள்பவர்.
2. Adaptable – Adjusts easily to new conditions, சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்பவர்k
புவியியலும் சுற்றுசூழலும் :
தமிழ்நாட்டின் பரப்பளவு சுமார் 1,30,058 சதுர கி.மீ ஆகும்.
பரப்பளவில் இந்தியாவில் தமிழ்நாடு 10-வது இடத்தில் உள்ளது.மலைகள்
தமிழ்நாட்டில் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மலைத்தொடர்கள்
NMMS :
MAT
கல்வி நிலையங்களை பராமரிப்பவர்களுக்காக. வழங்கப்பட் நிலங்கள் ____________________ ஆகும்.
(1) சாலபோகம்
(2) தேவதானம்
(3) பிரம்மதேயம்
(4)பள்ளிச் சந்தம்
விடை: (1) சாலபோகம்
செப்டம்பர் 02
நீதிக்கதை
“நட்பைத் தேர்ந்தெடுத்த நிவின்”
ஒரு சிறிய ஊரில் நிவின் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினான். அவனுக்கு சில நண்பர்கள் இருந்தனர்.
அவர்களில் விஷால் என்ற நண்பன் எப்போதும் பள்ளி வேலைகளைத் தவிர்ப்பதும், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் குறும்புகள் செய்வதும் வழக்கமாக இருந்தது.
“நிவின், இன்று வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம். வா, வெளியே விளையாடலாம்!” என்று விஷால் அடிக்கடி அழைப்பான்.
முதலில் நிவின் மறுத்தான். ஆனால் தினமும் நண்பனின் பேச்சைக் கேட்டதால், அவனும் படிப்பில் கவனம் செலுத்தாமல் போனான். தேர்வில் அவன் மதிப்பெண்களும் குறைந்தன.
இதைக் கவனித்த ஆசிரியர் நிவினை அழைத்து, “நிவின், நாம் யாருடன் பழகுகிறோமோ, அவர்களின் பழக்கங்கள் நம்மை யும் பாதிக்கலாம். நல்ல நண்பன் நம்மை முன்னேற்றுவான்; தவறான நண்பன் நம்மை பின்னுக்கு இழுப்பான்,” என்று அறிவுரை கூறினார்.
நிவினுக்கு தனது தவறு புரிந்தது. அவன் விஷாலிடம் சென்று,
“நாம் இருவரும் நல்ல விஷயங்களைச் செய்து முன்னேறுவோம். தவறான பழக்கங்களை விட்டுவிடுவோம்,” என்றான்.
விஷாலும் தனது தவறை உணர்ந்து, நிவினுடன் சேர்ந்து படிப்பிலும் நல்ல செயல்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...