NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Action Research 2012-13- Process starts in BRC



Action Research - Model in Tamil

Action Research - Model in English

அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று உறுதிமொழி எடுக்க உத்தரவு.


தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 014002 / ஜே 3 / 2012, நாள்.    .6.2012 
ஆணையர் தொழிலாளர் துறை, சென்னை - 6 கடிதம் எண். ட்டி.2 / 12470 / 2012 நாள். 11.6.2012 
தொடக்கக் கல்வி - குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - 2012 - 12.06.2012 அன்று அனுசரிக்கப்பட உள்ள குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று உறுதிமொழி எடுக்க உத்தரவு.
12.06.2012 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எடுத்துகொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி - கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் குறித்து விவரம் கேட்டல்.


பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.38287 / அ3பிரிவு / இ 1 / 2012, நாள். 4.6.2012 
நிர்வாகம் - தமிழ்நாடு அமைச்சுப் பணி - கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல.
15.03.2012 அன்று  உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு அளிக்க தேர்தோர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக 15.03.2007 பட்டியலின்படி பிரிவுக் கண்காணிப்பாளர் பணி மாறுதல்   பெற்று பணி ஏற்றுள்ள தகுதி வாய்ந்த முறையான கண்காணிப்பாளர்களின் பெயர்ப்பட்டியலினை அனைத்து அலுவலகங்கள் சார்பாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளுக்கு சதுரங்க விளையாட்டு பலகை வழங்குவதற்கு பள்ளிகளின் விவரங்கள் கோருதல்.


தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 007436 / கே 2 / 2012, நாள்.  6. 2012 பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் தொடக்க / நடுநிலைப்பள்ளி  மாணவர்களுக்கு  சதுரங்க விளையாட்டு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, "அரசு / நகராட்சி / மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்கும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் வீதம், 900 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.
இதையடுத்து மாவட்ட வாரியாக, தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப் பள்ளிகள், அடையாளம் காணப்பட்டு அதற்கான இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தியதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை   . ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பணிநிரவல் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு


உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கு முன், பணிநிரவல் மூலம் சில காலியிடங்களை நிரப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பு: 13ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்


             இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி (D.EL.Ed) (D.T.Ed என்பது D.EL.Ed என்று மாற்றப்பட்டுவிட்டது) படிப்பிற்கு, ஜூன் 13ம் தேதி முதல், ஜூன் 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

பொது மாறுதல்கள் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் மற்றும் மழலையர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் - வரையறுக்கப்பட்ட படிவத்தில் விவரங்களை கோருதல்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 11649 / ஐ 2 / 2012, நாள். 05.06.2012 

2012 ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் மற்றும் மழலையர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர்களின் பொதுமாறுதல் கோரும் விண்ணப்பங்களையும், மேலும் 2012 - 2013 கல்வியாண்டில் ஓய்வுபெறும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவிர 
01.06.2012 அன்று உள்ளப்படி தொடர்ந்து ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஏற்கெனவே வழங்கப்பட்ட மாறுதல் படிவத்தில் தயாரித்து மாறுதல் கோரும் விண்ணபங்களை அன்று நேரில் தனிநபர் மூலம் இயக்ககத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சத்துணவு பணியாளர்கள் நேரடி நியமனத்திற்காக கடைசி நாள்.20.06.2012 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு கடித எண். 7667 / 12 / ச. உ. தி நாள். 05.06.2012
சத்துணவு பணியாளர்கள் நேரடி நியமனத்திற்காக கடைசி நாள்.05.06.2012  லிருந்து 20.06.2012 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்..எண். 04404 / 1 / 2012, நாள். 05062012
அரசாணை(நிலைஎண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009அரசாணையின்படி தமிழாசிரியர்பட்டதாரி ஆசிரியர்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3கல்வித் தகுதியில்லாமல்பல ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டுள்ளதுஎனவே அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வு - மண்டல அளவில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடத்துதல்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 013145 / டி 1 / 2012 , நாள்.    .06.2012
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் நேரடி சுற்றுபயணம் - மண்டல அளவில் மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான  ஆய்வுக்கூட்டம் நடத்துதல் சார்பாக மண்டல அளவிலான ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் சுற்றுபயணம் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
நாள். 05.06.2012 முதல் 08.06.2012

June - Admission Calendar-2012



விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றை காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.


ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 1 முதல் 7 வரை.

How to calculate BE Cut of? - Details


பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப் பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். அதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

LAW College - Admission Details


சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

University Of Madras IDE Online Hall Tickets Now Avail




UNIVERSITY OF MADRAS
INSTITUTE OF DISTANCE EDUCATION
Online Hall- ticket
UG Courses
MAY-2012 Examination

CourseIndividualExam center
PG (M.A.,M.Com.,M.Sc.)Enter Your ENROLMENT NO and get HallticketEXAM-CENTER
UG (All)Enter Your ENROLMENT NO and get HallticketEXAM-CENTER

IGNOU B.Ed Hall ticket June 2012 Term-End Examination.


டி.இ.டி. தேர்வு ஜுலை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு.


கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேதி மாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு: ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்" என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.

அண்ணா பல்கலை ஆன்லைன் விண்ணப்பம் பெற


அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் வழங்கும் முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில் எம்.பி.ஏ., எம்சிஏ., எம்.எஸ்சி. (ஐடி), எம்.எஸ்சி (கணினி) உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணமான ரூ.650க்கான டிடியை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பத்தினை பெற



 இங்கு சொடுக்கவும். www.cde.annauniv.edu/Downapp.aspx 

பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.



பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீதுஇனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வுபணி நீக்கம்டிஸ்மிஸ் ஆகியஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் எனதமிழக அரசு அறிவித்தது.

பாரதியார் பல்கலையின் எஸ்இடி தேர்வு முடிவு.


கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய மாநில  தகுதித் தேர்வு (எஸ்இடி)க்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் பதிவு எண்களை பாரதியார் பல்கலைக்கழகம் இணையதளத்திலும், நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: சுயநிதி அரசு ஒதுக்கீடு கட்-ஆஃப்.


எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.  தமிழகத்தில் உள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,460 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழக ஆணை வெளியீடு.


அரசாணை (டி1) எண். 158 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.18.05.2012
 பள்ளிக்கல்வி -  2012 - 13 ஆசிரியர்  பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து  தமிழக ஆணை வெளியிட்டுள்ளது.
உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் செய்த பின்னரே பொது மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணி நிரவல் செய்யும் போது தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

Govt. Staff's General Transfer - Related Order

      1999 முதல் 2011 வரை இருந்த அரசு பணியாளர்களின் பொது மாறுதலுக்கான தடை ஆணை தற்போது விலக்கி கொல்ல படுகிறது - அரசு தலைமை செயலர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் TET தொடர்பான திருத்த அறிவிப்பு வெளியீடு


23.08.2010 முன்பே (அதாவது 22.08.2010 அன்றோ அதற்கு முன்போ ) ஒரு நபருடைய பணியமர்வுக்கான (அரசு, அரசு நிதி உதவி மற்றும் தனியார் பணி )  செயல்பாடு முறையான அறிவிப்பின் மூலம்  தொடங்கி இருந்தால், அவருக்கு TET எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அந்நபர் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுஇருக்க வேண்டும்.

Anganwadi Staff's Vacunt - New Application


பிஎஸ்சி மாணவர்கள் எம்இ படிக்கலாம்!


பிஎஸ்சி படித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ்  படிப்பை படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (பிட்ஸ்) கல்வி நிறுவனத்தின் ஹைதராபாத் வளாகம். இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை படித்து எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பட்டதாரிகள் சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு இல்லை!



பட்டதாரிகள் சி.ஏ. படிக்க விரும்பினால் இனி நுழைவுத் தேர்வு (Common Proficiency Test-CPT)  எழுதத் தேவையில்லை. நேரடியாகவே சி.ஏ. படிக்கலாம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

TNPSC குரூப்-4 நன்றாகத் தேர்வு எழுதுங்கள்! வேலை நிச்சயம்!



பொன். தனசேகரன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை நன்கு எழுதுபவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். வெளிப்படையான நிர்வாகத் தன்மையை தேர்வாணையம் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார் தேர்வாணையத்தின் தலைவர் ஆர். நட்ராஜ்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive