NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.



பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீதுஇனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வுபணி நீக்கம்டிஸ்மிஸ் ஆகியஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் எனதமிழக அரசு அறிவித்தது.
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீதுதுறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைசஸ்பெண்ட்,பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமேஇதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால்ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால்,ஒழுங்கீனச் சம்பவங்கள்அவ்வப்போது நடந்து விடுகின்றன.

அமைச்சர் அறிவிப்பு:கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில், "பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியரை, "டிஸ்மிஸ்செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்துஅரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' எனபள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.அதை தொடர்ந்துபுகாரில் சிக்கும் ஆசிரியர் மீதுஎன்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் எனபள்ளிக் கல்வித்துறைஅறிக்கையை ஒன்றை தயாரித்துதமிழக அரசுக்கு அனுப்பியது.
அரசாணை வெளியீடு:அதன் அடிப்படையில்தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 17ம் தேதியிட்ட அரசாணையில்பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும்வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர்மாணவமாணவியரிடம்ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால்மாணவர் சமுதாயம்குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்துசமீபகாலமாக ஊடகங்களில்செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்துபள்ளிக்கல்வி இயக்குனர்அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும்மாணவமாணவியரிடம்ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும்உரிய நடவடிக்கைகள் எடுக்கபள்ளிக்கல்வி இயக்குனர்அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின்தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.

அரசாணை (நிலை) எண்.121 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.17.05.2012. 
1. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான (Major Punishment) அதாவது கட்டாய ஓய்வு (Compulsory Retirement) / பணிநீக்கம் (Removal) / பணியறவு (Dismissal) போன்ற தண்டனை வழங்கப்படும். (அரசு பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்துவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தனடனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.
2. சமபந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்து கல்விச் சான்றுகளை ரத்து செய்யப்படும்.
3. பள்ளிக் குழந்தைகளும், மாணவ மாணவிகளும் பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
4. ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாவண்ணம் தகுந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். 
5. பள்ளி மாணவ மாணவிகளின் மனநிலை பாதிக்கும் பிரச்சனைகளை களைவதற்கான உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்கென பள்ளிக்கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்துவகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, இதன் மூலம் மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.  
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive