NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

23 ஆயிரத்து 128 பேர் விரிவுரையாளர் தேர்வில் பங்கேற்பு


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, 154 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள, 154 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இப்பணியிடங்களுக்கான, தேர்வு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் நேற்று நடந்தது.
இதற்கு, 26,328 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், உரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் இல்லாத, 12 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள, 26,316 பேருக்கு, ஹால் டிக்கெட்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியது.
இவர்களுக்கான தேர்வு, சென்னையில் ஏழு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும் 67 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் ஒரு மணி வரை 23,128 பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 3,188 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive